மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தடை உத்தரவொன்றை எதிர்த்து பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க தாக்கல் செய்த மனுவொன்றை விசாரிக்க ஐந்து பேர் அடங்கிய அமர்வொன்றை பிரதம நீதியரசர் நியமித்துள்ளார்.
முன்னதாக, இரட்டைப் பிரஜாவுரிமையைத் தக்கவைத்துள்ள கீதா குமாரசிங்க பாராளுமன்ற உறுப்பினராக அங்கம் வகிக்க முடியாது என மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து கீதா குமாரசிங்க மீயுயர் நீதிமன்றத்தில் மனுவொன்றைச் சமர்ப்பித்திருந்தார். இதையடுத்தே இந்த மனு மீதான விசாரணையை நடத்த ஐந்து பேர் கொண்ட அமர்வொன்றை பிரதம நீதியரசர் நியமித்துள்ளார்.
இந்த அமர்வில், நீதிபதிகளான சிசிர டி எப்ரூ, அனில் குணரத்ன, புவனேக அலுவிஹார, ஜயந்த ஜயவர்தன மற்றும் நளின் பெரேரா ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM