பெண்ணின் தங்கச் சங்கிலி கொள்ளை ; வவுனியாவில் சம்பவம்

Published By: Digital Desk 7

20 Sep, 2017 | 03:19 PM
image

வவுனியா கோவிற்குளம் தபால்பெட்டிச் சந்திக்கருகில் இன்று நண்பகல் 12.30 மணியளவில் பெண் ஒருவரின் தங்கச் சங்கிலியை மோட்டார் வண்டியில் வந்த இனந்தெரியாத இருவர் அபகரித்துச் சென்றுள்ளனர்.

இக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

கோவிற்குளம் தபால்பெட்டிச் சந்தியில் உள்ள கடைத்தொகுதி ஒன்றில் பொருட்களை கொள்வனவு செய்து விட்டு உமாமகேஷ்வரன் வீதியினூடாக சென்று கொண்டிருந்த பெண்ணை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கீழே தள்ளி அவரின் கழுத்தில் இருந்த ஒரு பவுண் தங்கச் சங்கிலியை அபகரித்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் முழுமையாக முகத்தை மூடி தலைக்கவசம் அணிந்திருந்ததாகவும் சிவப்பு நிற ஆடைகள் அணிந்திருந்ததாகவும் குறித்த பெண் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

சம்பவ இடத்திலுள்ள கடைகளின் சி.சி.டி.வி கெமரா பதிவுகளை சேகரித்து கொள்ளையர்களை அடையாளம் காணும் முயற்சியை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50