எக்னெலிகொட வழக்கு விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்தியோருக்கு  தண்டனை வழங்குக

Published By: Priyatharshan

27 Jan, 2016 | 04:54 PM
image

(லியோ நிரோஷ தர்ஷன்)

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமலாக்கப்பட்டமை தொடர்பிலான வழக்கு விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்தியவர்களுக்கு உரிய தண்டனை வழங்குமாறு சுதந்திர ஊடக இயக்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது,

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலியகொட காணாமலாக்கப்பட்டமை தொடர்பிலான வழக்கு விசாரணை கடந்த 25 ஆம் திகதி ஹோமாகம நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றது. 

இதன் போது பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர், அங்கு வழக்கு விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டார். இவர் சட்டத்தரணிகளையும் அதிகாரிகளையும் சாடினார். 

இது கண்டிக்கப்பட வேண்டிய விடயம் என்பதுடன் ,  இவ்வாறு செயற்பட்டவர்களுக்கு  தண்டனை வழங்கப்பட வேண்டும். அத்துடன் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவியையும் ஞானசார தேரர் அச்சுறுத்தியுள்ளார். இது தொடர்பாக ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு  செய்யப்பட்டுள்ளது. 

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமலாக்கப்பட்ட சம்பவத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் சிலருக்கு எதிராகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் , அவர்களை போர் வீரர்கள் எனக் கூறியே ஞானசார தேரர் கோஷம் எழுப்பியுள்ளர். 

ஏவ்வாறாயினும் சட்டத்தை அச்சுறுத்தும் வகையில் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என சுதந்திர ஊடக இயக்கம்  அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02