போதைக்கு அடிமையான மகன் செய்த கொடுமைகளைத் தாங்க முடியாத தாய், ஒப்பந்தக் கொலைகாரர்களை ஏவிக் கொலை செய்த குற்றத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மும்பையைச் சேர்ந்தவர் ராம்சரண் (20). போதைக்கு அடிமையான இவர், பல பெண்களை வல்லுறவுக்கு உட்படுத்தியிருக்கிறார்.
உச்சக்கட்டமாக, தனது தாயையும், சிறிய தாயையுமே வல்லுறவுக்கு உட்படுத்தினார். இதைத் தாங்கிக்கொள்ள முடியாத அவரது தாய், தன் மூத்த மகன் சீதாராமுடன் சேர்ந்து, ஒப்பந்தக் கொலைகாரர்களை ஏவி தனது ராம்சரணைக் கொலை செய்தார்.
ஒப்பந்தக் கொலைகாரர்கள் இருவரும் சீதாராமும் கடந்த ஆகஸ்ட் 14ஆம் திகதி ராம்சரணைத் தந்திரமாக வேறொரு ஊருக்கு அழைத்துச் சென்று, ஆளில்லாத பகுதியில் வைத்து அவரது நாக்கைத் துண்டித்துவிட்டு, படுகுழி ஒன்றில் தள்ளிச் சென்றுவிட்டனர்.
மறுநாள் ராம்சரணின் உடலைக் கைப்பற்றிய பொலிஸார், அவர் குறித்து விசாரணை செய்து வந்தனர்.
எனினும், தனது மகனைக் காணவில்லை என ராம்சரணின் தாயார் செய்திருந்த புகார் குறித்து நேற்று முன்தினமே (17) பொலிஸாருக்குத் தகவல் கிடைத்தது.
சந்தேகத்தின் பேரில் சீதாராமையும், அவரது தாயையும் விசாரித்தபோது, ராம்சரணைக் கொலை செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.
இதையடுத்து, சீதாராம், அவரது தாய் மற்றும் கொலைக்கு உதவிய இருவர் ஆகிய நால்வரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM