மாகாண சபை தேர்தலை ஒரேமுறையில் நடத்துவதற்கான இருபதாவது திருத்தம் தொடர்பான விடயத்தில் உயர் நீதிமன்றின் தீர்ப்பை கவனத்தில் கொண்டு சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவதா அல்லது மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அதனை நிறைவேற்றுவதா என்பதை பாராளுமன்றமே தீர்மானிக்க வேண்டும். சர்வஜன வாக்கெடுப்பிற்கு செல்லாவிட்டால் டிசம்பர் மாதம் 9 ஆம் திகதி மாகாண சபை தேர்தலை கட்டாயமாக நடத்த வேண்டும் என்று சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் இதனை தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
அண்மையில் சர்வஜன வாக்கெடுப்பு இடம்பெறுமா ? இல்லையா ? என்பது எமக்கு தெரியாது. இந்த விடயம் தொடர்பில் உயர் நீதிமன்றில் விவாதமும் இடம்பெற்றது. இதன் தீர்ப்பு சபாநாயகருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை மூன்றில் இரண்டு போதுமானது என பாராளுமன்றத்தில் தீர்மானிக்கப்பட்டால், மாகாண சபை தேர்தல் இந்த வருடம் இடம்பெறாது.
ஆனால் சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என பாராளுமன்றத்தில் தீர்மானிக்கப்பட்டால் நிச்சயமாக தேர்தல் ஒன்றுக்கு செல்ல வேண்டும். ஒக்டோபர் 2 ஆம் திகதி வேட்புமனு கோரப்பட்டு எவ்விதமான மாற்றமும் இன்றி தேர்தலை நடத்த வேண்டும். டிசெம்பர் 9 ஆம் திகதி தேர்தலை நடத்தியே ஆக வேண்டும். ஏனென்றால் இந்த சட்டமூலத்தில் சனிக்கிழமை தேர்தல் நடத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் டிசெம்பர் மாதம் 02, 09 மற்றும் 16 ஆகிய திகதிகள் காணப்படுகின்றன. 1 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மிலாது நபியின் பிறந்த தின நிகழ்வை முஸ்லிம்கள் கொண்டாடுகின்றனர். 3ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை போயா தினமாகக் காணப்படுகின்றது. 16 ஆம் திகதி கல்வி பொதுதராதர சாதாரண பரீட்சையின் ஆரம்பித்து விடும். அன்றும் பரீட்சைகள் இடம்பெறும். 9 ஆம் திகதியிலிருந்து பரீட்சைகள் ஆணையாளர் நாட்டில் உள்ள பாடசாலைகளை பரீட்சை நடவடிக்கைகளுக்காக கேட்டுள்ளார்.
எனவே தேர்தலுக்காக நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் எம்மால் பெற்றுக்கொள்ள முடியாதது போன்று, மாகாண சபை தேர்தலையும் ஒத்திவைக்க முடியாது. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இணங்க சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்ல வேண்டும் என்றால் 20 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவது முடியாத காரியம். எனவே டிசெம்பர் மாதம் 9 ஆம் திகதி கட்டாயமாக தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதுவே சட்ட நிலைமைகள் என தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM