பணிபுறகணிப்பில் ஈடுபட்டுவரும் இலங்கை மின்சார சபையின் ஊழியர்களை கூடுமான விரைவில் பணிக்கு திரும்புமாறும் மின்சக்தி மற்றும் மீள்புத்தாக்கல் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 14 ஆம் 15 ஆம் திகதிகளை சம்பளத்துடனான விடுமுறையாக கருதுவதாகவும அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கை மின்சார சபையின் உயர் அதிகாரிகளுக்கு சம்பளம் வழங்கப்படுகின்றபோது, பாரிய மோசடிகள் இடம்பெறுவதாக கூறி இந்த ஆரப்பாட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த குற்றச்சாட்டு உள்ளிட்ட மூன்று கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 13 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டம் குறித்து பல பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளபோதும், தீர்வுகள் எட்டப்படாத நிலையில் இன்று 5வது நாளாகவும் போராட்டம் தொடர்கின்றது
குறித்த போராட்டத்திற்கு நாளை நள்ளரவு தொடக்கம் இலங்கை மின்சார சபை தொழில் நுட்ப பொறியியலாளர் மற்றும் உதவி மின்சார அத்தியட்சகர்கள் ஒன்றிணைவதற்கு தீர்மானித்துள்ளனர்.
இந்நிலையிலேயே அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM