வங்காள விரிகுடாவில் ஏற்பட்டிருக்கும் சீரற்ற காலநிலையால் அடுத்த மூன்று நாட்களுக்கு கடல் கொந்தளிப்பாக இருக்கும் என்று வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்தக் காலநிலை தாக்கத்தால் நாட்டின் வடமேற்கு மற்றும் தென்மேற்குப் பகுதிகளில் இன்றும் (16) நாளையும் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கடும் காற்று வீசக்கூடும். குறிப்பாக வடக்கு, வடமத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அதைச் சூழவுள்ள கடற்பகுதியிலும் கடுங்காற்று வீசலாம்.
ஊவா மாகாணம் மற்றும் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பிறகு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
புத்தளம் முதல் காங்கேசன்துறை வழியாக திருகோணமலை வரை நீண்டிருக்கும் கரையோரப் பகுதியிலும், அம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையான கரையோரப் பகுதியிலும் கடல் கொந்தளிப்பாகக் காணப்படலாம். மேலும் மணிக்கு ஐம்பத்தைந்து முதல் அறுபது கிலோமீற்றர் வேகத்தில் கடுமையான காற்றும் வீசக்கூடும் என்றும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM