மன்னார் எழுத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவரின் ஆசிரியரின் வீட்டில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கொள்ளச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்களை மன்னார் பொலிஸார் கைது செய்துள்ளதோடு கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் மற்றும் பணத்தையும் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது,
மன்னார் எழுத்தூர் கிராம அலுவலகர் பிரிவில் வசித்து வரும் முருங்கன் பாடசாலை ஆசிரியர் நிவீன் பெனாண்டோ (வயது-47) என்பவரது வீட்டினுள் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை நுழைந்த கொள்ளையர்கள் ஆசிரியர் அவரது மனைவி மற்றும் தந்தை ஆகியோரை கண்மூடித்தனமாக தாக்கிய பின் அவர்களை கட்டி வைத்து வீட்டில் இருந்த பணம் மற்றும் பெறுமதியான நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.
உடனடியாக மன்னார் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்குச் சென்ற மன்னார் பொலிஸார் தடயங்களை சாட்சியமாக வைத்து விசாரணைகளை மேற்கொண்டு சந்தேக நபர்களை தேடி வந்தனர்.
இந்த நிலையில் மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.எம்.எம்.விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாகவும், மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அஜந்த றொட்ரிகோவின் மேற்பார்வையில், மன்னார் பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஆர்.சரத் தலைமையில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிஸ் குழுவினர் பிரதான சந்தேக நபர்கள் உட்பட 7 பேரை கைது செய்துள்ளனர்.
பிரதான சந்தேக நபர்கள் 3 பேரூம் எருக்கலம்பிட்டி, புதுக்குடியிருப்பு, புத்தளம் போன்ற பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரிவித்த மன்னார் பொலிஸார் குறித்த பிரதான சந்தேக நபர்களை முச்சக்கர வண்டியில் ஏற்றிச் சென்றவர், திருடப்பட்ட நகைகளை விலைக்கு வாங்கியவர்கள் என மேலும் 4 பேரை கைது செய்துள்ளதோடு சந்தேக நபர்கள் பயன்படுத்திய முச்சக்கர வண்டி ஒன்றையும் மோட்டார் சைக்கிள் ஒன்றினையும் மீட்டுள்ளனர்.
எனினும் மேலும் ஒரு பிரதான சந்தேக நபர் தலைமறைவாகியுள்ள நிலையில் குறித்த நபரையும் மன்னார் பொலிஸார் தேடி வருகின்றனர்.
கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் புத்தளம் பிரதேசத்தில் விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையிலே கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை தொடர்ந்து விற்பனை செய்யப்பட்ட நகைகள் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த ஆசிரியரின் வீட்டில் திருடப்பட்ட 11 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் பெறுமதியான நகைகள் மற்றும் பணம் மன்னார் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
தற்போது கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபர்கள் மூவர் உற்பட ஏழு பேரூம் மன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
விசாரனைகளின் பின் குறித்த சந்தேக நபர்கள் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக மன்னார் பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஆர்.சரத் மேலும் தெரிவித்தார்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM