சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியின் அங்கீகாரத்தை நிராகரித்துள்ள ஐக்கிய இராச்சியத்தின் பொது மருத்துவ சபையுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்திருப்பதாக சைட்டம் தெரிவித்துள்ளது.
இப்பேச்சுவார்த்தையின் மூலமாக, தனது மாணவர்கள் ஐக்கிய இராச்சியத்தின் பொது மருத்துவ சபையில் உயர் கல்வி நடவடிக்கைகளுக்காக விண்ணப்பிக்க அனுமதி கோரியே இந்தப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் சைட்டம் மேலும் தெரிவித்துள்ளது.
முன்னதாக, சைட்டத்துக்கான அங்கீகாரத்தை ஜி.எம்.சி. (General Medical Council) என்று அழைக்கப்படும் இந்நிறுவனம் நிராகரித்திருந்தது.
இது, ஐக்கிய இராச்சியத்தில் மருத்துவர்களைப் பணியில் அமர்த்துவதற்கான பரிந்துரைகளை வழங்கும் ஒரு சுயாதீன நிறுவனமாகும்.
இந்நிறுவனத்தின் அங்கீகாரத்தை வேண்டி சர்வதேச அளவில் பல மருத்துவக் கல்லூரிகள் விண்ணப்பித்திருந்தன. அவற்றில், பதினொரு மருத்துவக் கல்லூரிகளை தகுதியற்றவையாகக் கருதி மேற்படி நிறுவனம் நிராகரித்துள்ளது.
அந்தப் பதினொரு கல்லூரிகளுள் சைட்டம் கல்லூரியும் ஒன்று. மக்களின் பாதுகாப்பையும், நன்மையையும் உறுதிப்படுத்தும் விதமாகவே மேற்படி பதினொரு கல்லூரிகளும் நிராகரிக்கப்பட்டுள்ளன என்றும், நிராகரிக்கப்பட்டுள்ள இந்தப் பதினொரு கல்லூரிகளிலும் கல்வி கற்கும் மாணவர்கள், ஐக்கிய இராச்சியத்தில் நடத்தப்படும் மருத்துவப் பரீட்சைகளுக்குத் தோற்ற அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும், ஐக்கிய இராச்சியத்தின் மருத்துவமனைகளில் பணியாற்ற அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் ஜி.எம்.சி. நிறுவனம் தெரிவித்திருந்தது.
ஒவ்வொரு கல்லூரியினதும் செயற்பாடுகளையும் ஏனைய தகவல்களையும் ஆழமாக ஆராய்ந்த பின்னரே இந்தப் பதினொரு கல்லூரிகளும் நிராகரிக்கப்பட்டுள்ளன என்றும் அந்நிறுவனம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM