வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் அண்மையில் நடைபெற்ற வருடாந்த மஹோசவத்தின் போது யாழ். மாநகர சபைக்கு 1கோடியே 37 இலட்சத்து 43 ஆயிரத்து 163 ரூபாய் வருமானமாக கிடைத்துள்ளதாக யாழ். மாநகர ஆணையாளர் பொ.வாகீசன் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் இவ்வாண்டு (2017) நல்லூர் மஹோற்சவ காலத்தில் கடைகள், விளம்பரப்பதாகைகள், சித்தமருந்து வகைகள், சஞ்சிகை விற்பனை, சேதன உர விற்பனை மற்றும் நன்கொடை ஆகியவற்றின் மூலம் யாழ். மாநகர சபைக்கு 2 கோடியே 5 இலட்சத்து 80 ஆயிரத்து 880 ரூபா 94 சதம் மொத்த வருமானமாக கிடைத்துள்ளது. இவ்வருமானத்தில் வழங்கும் பொருட்கள் பயன்பாட்டுக்கான செலவுக்கான கொடுப்பனவு, மேலதிக நேரக் கொடுப்பனவு உட்பட மொத்தமாக 68 இலட்சத்து 37 ஆயிரத்து 717 ரூபா செலவு செய்யப்பட்டுள்ளது . செலவிலும் கூடிய இலாபாக 1 கோடி 37 இலட்சத்து 43 ஆயிரத்து 163 ரூபா கிடைத்துள்ளது.
சென்ற வருடத்துடன் போது ஒப்பிடும் போது இவ் வருடம் 12 இலட்சத்து 90 ஆயிரத்து 205 ரூபா 41 சதம் வருமான அதிகாரித்து காணப்படுகிறது. இதனை சென்ற வருடத்துடன் ஒப்பிடும்போது 6.7 சதவித வருமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. செலவானது 7 இலட்சத்து 19 ஆயிரத்து 599 ரூபா 15 சதத்தால் குறைவடைந்துள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 9.5 வீதத்தால் செலவு குறைவடைத்துள்ளது. மஹோற்சவ காலத்தில் கிடைக்கப்பெற்ற இலாபம் நகர அபிவிருத்திக்கும் மற்றும் இதர பயன்பாட்டிற்கும் பயன்படுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM