பெளத்த தர்மத்தின் வளர்ச்சிக்கு சில் துணி வழங்கியமைக்காகவே லலித் வீரதுங்க மற் றும் அனுஷ பெல்பிட்ட கைது செய்யப்பட்டுள்ளனர். ஜனாதிபதி விசேட அபிவிருத்தி திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டதே ஒழிய தேர்தலை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படவில்லை. வாக்காளர்களுக்கு அன்றி விகாரைகளுக்கே சில் துணிகள் பகிரப்பட்டன. அப்படியெனில் பாடசாலை சீருடை வழங்குவதின் ஊடாக தேர்தல் பெறுபேறுகளில் மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா? என முன் னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக் ஷ கேள்வி எழுப்பினார்.
மேலும் அதிகாரத்தை பயன்படுத்தி சுய இலாபத்திற்காக அன்றி ஜனாதிபதி மற்றும் அமைச்சரவையின் உத்தியோகபூர்வ உத்தரவினை அமுல்படுத்தும் அரச அதிகாரிகளை பாதுகாப்பது அரசாங்கத்தின் பொது கொள்கையாக இருக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பெல்பிட்ட ஆகியோர் குறித்து அவர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
தொலைத்தொடர்பு கண்காணிப்பு ஆணைக்குழுவிற்கு சொந்தமான 600 மில்லியன் ரூபாவை ஜனாதிபதி செயலக கணக்கிற்கு பெற்று பெளத்த விகாரைகளுக்கு சில் துணி வழங்கியமைக்காக முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத்தொடர்பு கண்காணிப்பு ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் அனுஷ பெல்பிட்ட ஆகியோருக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனையும் ஒருவருக்கு தலா 2 மில்லியன் ரூபா தண்டமும் 50 மில்லியன் ரூபா நஷ்டஈடும் வழங்க வேண்டும் என கூறி மேல் நீதிமன்றத்தினால் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பு வந்த கையோடு நாட்டு மக்கள் ஆச்சரியம் அடைந்தனர். இது தொடர்பில் பலர் என்னிடம் கேட்டறிந்தனர். எனினும் குறித்த பணத்தொகையை எக்காரணம் கொண்டும் தமது சொந்த தேவைகளுக்கு குறித்த இருவர் பயன்படுத்தவில்லை என தீர்ப்பின் மூலம் ஊர்ஜிதமாகியுள்ளது. ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ உத்தரவினையே இவர்கள் செயற்படுத்தியுள்ளனர்.
2014 ஆம் ஆண்டு ஜனாதிபதி விசேட அபிவிருத்தி திட்டங்களின் பிரகாரமே சில் துணி பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி விசேட அபிவிருத்தி திட்டத்தின் கீழ் போயா தினங்களில் பெளத்த மத பக்தர்களுக்கு உதவி வழங்கும் நோக்குடனே குறித்த திட்டத்தினை இவர்கள் நடைமுறைப்படுத்தியுள்ளனர். கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு கணினி வழங்குவதும் விசேட திட்டங்களில் ஒன்றாகும். ஜனாதிபதி தேர்தல் அறிவிப்புக்கு முன்பே இந்த திட்டம் உத்தேசிக்கப்பட்டது. இந்த திட்டத்திற்கு ஜனாதிபதி செயலகத்தின் மதவிவகார தொடர்பாடல் செயலாளர் வடினாபஹ சோமனந்த தேரரே பொறுப்பாளராக இருந்து வந்ததுடன் பொருளாதார அபிவிருத்தி அமைச்சே கண்காணித்தது.
இதன்படி சில்துணி பகிர்ந்தளிக்கும் முகவர்களின் ஊடாக பிரதேச செயலகத்தின் பிரதான விகாரையொன்றுக்கு குறித்த சில் துணிகள் வழங்கப்பட்டு, அதன்பின்னர் பிரதான விகாரைகளின் ஊடாக சிறிய விகாரைகளுக்கு சில் துணிகளை பெற்றுகொடுப்பதே திட்டத்தின் செயல் முறையாக காணப்பட்டது.
இது 11 ஆயிரத்து 21 விகாரைகளை ஒன்றிணைத்து முன்னெடுக்கப்பட்ட திட்டமாகும். இதன்போது வாக்காளர்களுக்கு அன்றி விகாரைகளுக்கே சில் துணி பகிர்ந்தளிக்கப்பட்டது என்பதனை கூறிக்கொள்ள விரும்புகின்றேன். எனினும் சில் துணி வழங்கப்படுவதே எமது பொறுப்பாகும். அதனை யாருக்கு வழங்க வேண்டும், எப்போது வழங்க வேண்டும் என்பதனை விகாராதிபதியே தீர்மானிக்க வேண்டும். இதன்போது குறித்த நேரத்தின் போதே வழங்கப்பட வேண்டும் ஜனாதிபதி செயலகத்தினால் எந்தவொரு ஆலோசனையும் வழங்கப்படவில்லை.
அரசியல் நோக்கங்களுக்காக சில் துணிகள் பகிர்ந்தளிக்கப்படவில்லை. பாடசாலைகளில் வருட இறுதியில் பாடசாலை சீருடை வழங்கப்படுவது வழக்கமாகும். இந்த பாடசாலை சீருடை வாக்குகளை பெறுவதற்கு வழங்கப்படுவது என்று கூறுவது வேடிக்கையானது. இதனால் வாக்கு பெறுபேறுகளை மாற்றியமைக்க முடியுமா? அதுபோலவே சில் துணி பகிர்ந்தளிப்பை அரசியலாக்க முடியாது.
அதேபோன்று குறித்த சில் துணியில் மஹிந்த ராஜபக் ஷ உருவம் பொறிக்கப்பட்ட ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்ததாக வழக்கின் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. சில் துணி எங்கிருந்து கிடைக்கின்றது என்பதனை மக்கள் அறிந்து கொள்வதற்காகவே குறித்த ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது என்பதனை புரிந்து கொள்ள வேண்டும்.
1981 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் சட்டமூலத்தின் ஷரத்துகளுக்கு முரணான வகையில் சில் துணி பகிர்ந்தளிக்கவில்லை. கட்சி பேதங்கள் பாராமல் அனைத்து பெளத்த பக்தர்களுக்கே சில் துணி வழங்கப்பட்டிருந்தது. எனினும் மேல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் போது குறித்த வழக்கின் குற்றம் சரியான முறையில் இனங்காணப்படவில்லை.
மேலும் ஜனாதிபதி விசேட அபிவிருத்தி திட்டத்திற்கு 2014 ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட 1000 மில்லியன் ரூபாவில் 400 மில்லியன் ரூபா கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு ஒதுக்கப்பட்டமையினால் நிதிப் பற்றாக்குறை காரணமாக தொலைத்தொடர்பு கண்காணிப்பு ஆணைக்குழுவிடம் நிதி கோரப்பட்டது. இதற்கு ஆணைக்குழுவின் பணிப்பாளர் சபையும் அனுமதி வழங்கியது. இதன்படி 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் திகதி ஜனாதிபதி செயலக கணக்கிற்கு 600 மில்லியன் ரூபா வைப்பு செய்யப்பட்டது.
எனவே இவ்வாறான முன்னூதாரணங்களின் ஊடாக எதிர்காலத்தில் அரச ஊழியர்கள் தன்னுடைய நியாயத்தை உறுதிப்படுத்த முடியாமல் போய்விடும். இந்த வழக்கில் தொலைத் தொடர்பு கண்கா ணிப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் சபை அனுமதித்த விடயம் வழக்கின் தீர்ப்பில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.
அரசியலமைப்பில் 9 ஆவது ஷரத்தின் படி பெளத்த தர்மத்தை பாதுகாத்தல் மற்றும் வளர்ச்சிக்குட்படுத்தல் என்பதின் பிரகாரம் அரசாங்கத்தின் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி விடுத்த உத்தரவினை பின்பற்றியமைக்கே லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பெல்பிட்ட ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டுள் ளனர். இதனைதவிர எந்தவொரு ஊழல் மோசடிக்கும் உடந்தையாகவில்லை என் பது ஊஜிதமாகியுள்ளது.
எனவே அதிகாரத்தை பயன்படுத்தி சுய இலாபத்திற்காக அன்றி ஜனாதிபதி மற்றும் அமைச்சரவையின் உத்தியோகபூர்வ உத்தரவினை அமுல்படுத்தும் அரச அதி காரிகளை பாதுகாப்பது அரசாங்கத்தின் பொது கொள்கையாக இருக்க வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM