“குப்பைகள் நீங்கிய சமுத்திரத்திற்காக” எனும் தொனிப்பொருளின் கீழ் தேசிய கரையோர சுத்தப்படுத்தல் மற்றும் கடல்வளங்கள் பாதுகாப்பு வாரம் இன்று முதல் எதிர்வரும் 22 ஆம் திகதி வரையில் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு அறிவித்துள்ளது.
இந்நிகழ்வானது இன்று ஜனாதிபதி தலைமையில் கொழும்பில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாகவும் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் கடற்சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் ரியர் அட்மிரல் ரோகண பெரேரா தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பசுமைத்திட்டத்திற்கமைவாக கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் செப்டெம்பர் மாதம் மூன்றாவது வாரத்தில் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.
அதற்கமைவாக இவ்வருடம் குப்பைகள் நீங்கிய சமுத்திரத்திற்காக எனும் தொனிப்பொருளின் அடிப்படையில் கரையோர சுத்தப்படுத்தல் மற்றும் கடல்வளங்கள் பாதுகாப்பு வாரம் இன்று முதல் எதிர்வரும் 22 திகதிவரையில் அமுலில் இருக்கும்.
இந்த நாட்களில் சமுத்திர பாதுகாப்பு தொடர்பில் நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும் நாட்டின் 14 மாவட்டங்கள் கரையோர பிரதேசங்களை கொண்டும் உள்ளது. அவற்றை சுத்தப்படுத்தும் நடவடிக்கைகளையும் இன்று முதல் மேற்கொள்ளவுள்ளோம்.
ஐக்கிய நாடுகளின் நிலைத்திருக்கக் கூடிய அபிவிருத்தி திட்டத்தின் 14 ஆவது கொள்கையாக தேசிய சமுத்திரத்தை பாதுகாப்பது தொடர்பிலான குறிக்கோள் உள்ளது. அதனை கருத்திற்கொண்டும் இதற்கான வேலைத்திட்டங்கள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக சர்வதேச ரீதியில் ஒரு வருடத்திற்கு 8 மில்லியன் மெற்றிக்தொன் அளவிலான பிளாஸ்டிக் பொருட்களும், 150 மெற்றிக்தொன் அளவிலான பொருட்களும் கடலில் கலக்கின்றது. இதனால் பெரும்பாலும் கடல் மாசடைகின்றது. அவ்வாறு கடலில் கலக்கும் 60 வீதமான பொலித்தீன், பிளாஸ்டிக்பொருட்களை மீன் கடல் வாழ் உயிரினங்களும் உட்கொண்டு உயிரிழக்கின்றன.
எனவே எமது கடல் வளத்தையும் எமது நாட்டுக்கே உரித்தான கடல்வாழ் உயிரினங்களையும் பாதுகாக்க வேண்டிய தேவையுள்ளது. இதனை கருத்திற்கொண்டே குறித்த கடல் வளங்கள் பாதுகாப்பு தேசிய வாரம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டில் சர்வதேச கரையோர தூய்மைப்படுத்தல் நிகழ்ச்சித்திட்டத்தில் இலங்கையின் கடற்கரை பிரதேசங்களில் மாத்திரம் 21 இலட்சத்து 27 ஆயிரத்து 565 சிகரட் துண்டுகளும் ஒரு இலட்சத்து 24 ஆயிரத்து 470 பிளாஸ்டிக் போத்தல்களும் 4 இலட்சத்து 24 ஆயிரத்து 934 பொலித்தீன் பைகளும் 4 இலட்சத்து 2 ஆயிரத்து 375 கண்ணாடி போத்தல்களும் அவை தவிர்ந்த ஏனைய பல்வேறு பொருட்களும் சேகரிக்கப்பட்டுள்ளன.
இம்முறை அவ்வாறு கிடக்கும் குப்பைகளை அகற்றுவதற்கு 1500 க்கும் மேற்பட்ட ஊழியர்களை இந்த நிகழ்ச்சி திட்டத்தில் இணைத்துக்கொள்வதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
மேலும் சகல பாடசாலை மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் இது தொடர் பிலான விளக்கமளிக்கவுள்ளதுடன் அவர்க ளையும் இந்த நிகழ்ச்சித்திட்டத்தில் இணை த்துக்கொள்வதற்கும் எதிர்பார்த்துள்ளோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM