தலவாக்கலை விபத்தில் ஒருவர் பலி : தலைமறைவான சாரதி மடக்கிப்பிடிப்பு

Published By: Digital Desk 7

14 Sep, 2017 | 01:09 PM
image

தலவாக்கலை பகுதியில் வேன் மோதி ஒருவர் பலியான சம்பவத்துடன் தொடர்புடைய தலைமறைவான வேன் சாரதியை நேற்று இரவு தலவாக்கலை  பொலிஸார் கைது செய்துள்ளனர்.

லிந்துலை நகரசபைக்கு அருகாமையில் நேற்று மாலை மஞ்சள் கோட்டினை கடக்க முயற்சித்தவர் மீது வேன் மோதியதில் குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் எனவும் விபத்தை ஏற்படுத்திய வேன் சாரதி தலைமறைவாகிவிட்டார் எனவும் தமக்கு தகவல் கிடைத்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் லிந்துலை கூம்மூட் பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய சூசை சந்தனம்  என பொலிஸாரினால் இனங் காணப்பட்டுள்ளார். 

தப்பிச் சென்ற வேன் சாரதியை மடக்கிப்பிடிப்பதற்காக பொலிஸார் பல முயற்சிகளை மேற்கொண்டதன் விளைவாகவே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரை இன்று நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்த பொலஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17