முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ சற்றுமுன்னர் பொலிஸ் நிதி மோசடிப் பிரிவில் (எப்.சி.ஐ.டி) முன்னிலையாகியுள்ளார்.
கல்கிசை மற்றும் இத்மலானை பகுதிகளில் காணிகளை கொள்வனவு செய்தமை அதில் ஒரு காணியில் அதிசொகுசு வீடொன்றினை நிர்மாணித்தமை தொடர்பில் இன்று விசாரணைகள் இடம்பெறவுள்ளதாக நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் தகவல்கள் தெரிவித்தன.
கல்கிசை மிஹிந்து மாவத்தையில் 31 பேர்ச் காணியை கொள்வனவு செய்தமை, இரத்மலானை கெக்கடிய பிரதேசத்தில் 31.5 பேர்ச் காணியில் அதிசொகுசு வீடொன்றினை நிர்மாணித்தமை மற்றும் அதற்கான பணத்தை உழைத்த, செலவளித்த விதம் தொடர்பிலும் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதேவேளை, யோஷித ராஜபக்ஷவுக்கு கடந்த 12ம் திகதி பொலிஸ் நிதி மோசடிப் பிரிவு அழைப்பு விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM