இலங்கையில் கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்த பாடசாலை மட்டத்திலிருந்து சீர்திருத்தங்களை செய்ய வேண்டும் என்ற புது வியூகங்களுடன் களமிறங்கியுள்ளார் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன.
இலங்கை கிரிக்கெட் அணி அண்மைக் காலமாக சந்தித்து வரும் தொடர் தோல்விகளுக்கு பாடசாலை மட்ட கிரிக்கெட்டில் காணப்படுகின்ற குறைபாடுகளே காரணம் என முன்னாள் வீரர்கள் பலர் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக, இலங்கை அணி அண்மைக்காலமாக சந்தித்து வருகின்ற தோல்விகளுக்கு பாடசாலை கிரிக்கெட்டும் பொறுப்புக்கூற வேண்டும் எனவும், பாடசாலை மட்டத்தில் விளையாடுகின்ற வீரர்கள் பொருத்தமான முறையில் திறமைகளை அடிப்படையாகக் கொண்டு அடையாளம் காணப்படாமை போன்ற காரணிகள் கிரிக்கெட் விளையாட்டு இவ்வாறு பின்னடைவை சந்திக்க காரணமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், இலங்கை கிரிக்கெட்டை அபிவிருத்தி செய்யும் நோக்கிலும், பின்னடைவை எதிர்நோக்கியுள்ள பாடசாலை கிரிக்கெட்டை முன்னேற்றுவதற்காகவும் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசமின் ஆலோசனைக்கமைய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களைக் கொண்ட விசேட குழுவொன்று கடந்த சில தினங்களுக்கு முன் நியமிக்கப்பட்டது.
இதனையடுத்து பாடசாலை கிரிக்கெட் சங்கம் மற்றும் கல்வி அமைச்சரினால் நியமிக்கப்பட்ட குழுவினருடனான விசேட சந்திப்பு நேற்று கல்வி அமைச்சரின் தலைமையில் கொழும்பில் இடம்பெற்றது. இதன்போது இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களான சிதத் வெத்தமுனி, மஹேல ஜயவர்தன, திலின கண்டம்பே உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM