தமிழர்களின் அரசியல் உரிமை தொடர்பில் சிங்கள பௌத்த ஆதிக்கத்தின் நிலைப்பாட்டில் மாற்றங்கள் இல்லை. கொடுப்பதை வாங்கிக்கொண்டு இருக்க வேண்டும் என்றே அவர்கள் இன்னும் கருதுகின்றனர். எனவே நிலையான மாற்றத்திற்காக கடினமாக முயற்சிக்க வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்கர்களுடனான சந்திப்பு தொடர்பில் நேற்று புதன்கிழமை தெளிவுபடுத்துகையிலேயே வட மாகாண முதலமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களை சந்தித்து கலந்துரையாடுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. நீண்ட நாட்களாக சந்திக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பிற்கு அமைவாக சிறந்த சந்திப்பை என்னால் முன்னெடுக்க முடிந்தது.
அஸ்கிரிய மகாநாயக்கருடனான சந்திப்பானது தனிப்பட்டதாக அமையவில்லை. மாறாக உத்தியோகபூர்வமானதாக அஸ்கிரிய பீடத்தின் முக்கிய மகாநாயக்க தேரர்கள் சந்திப்பில் கலந்து கொண்டனர்.
எவ்வாறாயினும் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் நிலைப்பாடுகளை மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களுக்கு அறிய கொடுத்தோம். சமஷ்டி என்ற சொல் தொடர்பில் முன்கூட்டியே தீர்மானம் ஒன்றில் உள்ளனர். இலங்கைக்கு எதிரானது, பிரிவினைவாதம் மற்றும் நாட்டை துண்டாடி விடும் என்கின்றது போன்று அவர்கள் சமஷ்டி தொடர்பில் நிலையான தீர்மானத்தை வைத்துள்ளனர்.
இதனூடாக சிங்கள பௌத்த ஆதிக்கத்தின் நிலைப்பாடு வெளிப்பட்டுள்ளது. இந்த நிலைப்பாட்டை மாற்றுவது கடினமானது என்றாலும் இயலுமானதொன்றாகவே உள்ளது. அரசியல் தீர்வு என்ற விடயத்திற்கு செல்லும் போது ஒற்றையாட்சி என்று கூறுகின்றனர். அதில் தமிழ் மக்களின் தீர்வு விடயம் எவ்வாறு உள்ளது என்பது குறித்து பேசுவதாக இல்லை.
கொடுப்பதை வாங்கிக்கொண்டு தமிழர்கள் இருக்க வேண்டும் என்கின்ற நிலைப்பாடே காணப்படுகின்றது. எனவே இன்னும் கடினமாக உழைக்க வேண்டியுள்ளது. ஏனைய தரப்புகளையும் சந்தித்து பேசலாம் என்று நினைத்துள்ளேன் என தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM