தீர்வின்றேல் நாளை முதல் மின்சாரத்துறை ஸ்தம்பிதமடையும்.!

Published By: Robert

14 Sep, 2017 | 09:32 AM
image

தமது கோரிக்­கை­க­ளுக்கு அர­சாங்கம் உரிய தீர்வை முன்­வைக்­கா­வி­டத்து நாளை நண்­பகல் முதல் பரந்­து­பட்ட தொழிற்­சங்கப் போராட்­டத்தில் மின்­சார சபை ஊழி­யர்கள் இறங்­க­வுள்­ள­தாக இலங்கை ஒன்­றி­ணைந்த தொழிற்­சங்க முன்­ன­ணியின் ஏற்­பாட்­டாளர் ரஞ்சன் ஜயலால் தெரி­வித்தார்.

Image result for மின்­சார சபை ஊழி­யர்கள் virakesari

மின்­சார சபை ஊழி­யர்கள் பல்­வே­று­பட்ட கோரிக்­கை­களை முன்­வைத்து நேற்று நண்­பகல் முதல் தொழிற்­சங்கப் போராட்­டத்தில் இறங்­கி­யுள்­ளனர். அது தொடர்பில் வின­வி­ய­போதே அவர் இதனைத் தெரி­வித்தார். 

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

மின்­சார சபை ஊழி­யர்கள் நீண்ட கால­மாக சம்­பளப் பிரச்­சி­னை­யினை எதிர்­கொண்­டுள்­ளனர். அதற்கு உரிய தீர்வு முன்­வைக்­கப்­பட வேண்டும். அத்­துடன் மின்­சார சபையில் ஏற்­பட்­டுள்ள நஷ்­டத்தை ஈடு­செய்­வ­தற்கு மின் கட்­ட­ணத்தில் அதி­க­ரிப்பு செய்­யு­மாறு மின்­சார சபையின் நிர்­வா­கத்­தினால் அர­சாங்­கத்­திடம் கோரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

எனினும் மின் கட்­ட­ணத்தில் அதி­க­ரிப்புச் செய்­யக்­கூ­டாது. ஏனெனில் மின்­சார சபையில் இடம்­பெறும் ஊழல் மோச­டி­க­ளி­னா­லேயே மின் கட்­ட­ணத்தில் ஐம்­பது சத­வீத சுமை­யினை பாவ­னை­யா­ளர்கள் எதிர்­கொள்ள நேர்­ந்துள்­ளது. ஆகவே அச்­ச­பைக்குள் நிலவும் மோச­டி­களை தடுப்­ப­துடன் மின் கட்­ட­ணத்தில் அதி­க­ரிப்புச் செய்­யக்­கூ­டாது.

மேற்­சொன்ன பிர­தான கோரிக்­கைகள் உட்­பட இன்னும் சில கோரிக்­கை­களை முன்­வைத்து தொழிற்­சங்கப் போராட்­டத்தில் இறங்­கி­யுள்ளோம். 

எனினும் வைத்­தி­ய­சாலை உட்­பட முக்­கிய இடங்­களில் பணியில் ஈடு­பட்­டுள்ளோம்.  இருந்த போதிலும் அர­சாங்­கத்­திற்கு நாம் நாளை வெள்­ளிக்­கி­ழமை நண்­பகல் வரை அவ­காசம் வழங்­கு­கிறோம். அக்­கா­லக்­கெ­டுவில் எமது கோரிக்­கை­க­ளுக்கு உரிய  தீர்வு முன்­வைக்­கப்­பட வேண்டும். அல்­லாது போனால் நாளை வெள்­ளிக்­க­ிழமை நண்­பகல் முதல் பரந்­து­பட்ட தொழிற்­சங்கப் போராட்­டத்தில்  இறங்­க­வுள்ளோம்.

அப்­போ­ராட்­டத்­திற்கு எதிராக அரசாங்கம் எவ்வகையான அழுத்தத்தை பிரயோகித்தாலும் எமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிட்டும் வரையில் போராட்டத்தை கைவிடப் போவதில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஊதா நிற இலை வடிவ முகம்...

2024-03-19 10:22:17
news-image

முதலில் ஜனாதிபதி தேர்தல் - அமைச்சர்களிடம்...

2024-03-19 09:54:32
news-image

அதிக வெப்பநிலையால் விலங்குகளுக்கும் பாதிப்பாம்!

2024-03-19 10:01:21
news-image

மன்னாரில் பனங்காட்டுக்குள் பரவிய தீயினால் வீடு...

2024-03-19 09:45:20
news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26
news-image

மட்டு போதனா வைத்தியசாலை புற்று நோய்...

2024-03-19 01:40:58
news-image

இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை...

2024-03-19 01:25:18
news-image

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன...

2024-03-18 23:43:46
news-image

விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ்...

2024-03-18 22:52:15
news-image

நீர்த்தேக்கத்தில் மூழ்கி இளம் பிக்கு உயிரிழப்பு  

2024-03-18 22:16:52
news-image

வெடுக்குநாறிமலை விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டோர் குறித்து ஆராய...

2024-03-18 18:20:01