முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, தொலைத்தொடர்பு ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் அனுஷ பெல்பிட்ட ஆகி யோர் தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பு தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள மஹிந்த ராஜபக் ஷ தானே சில் துணிகளை வழங்குவதற்கு உத்தரவிட்டதாக தெரிவித்திருக்கிறார். எனவே அவர் மீது பொறுப்புக்கூறல் மற்றும் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை தற்போது யார் வேண்டுமானாலும் தொடரலாம் என்று இணை அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட இணை அமைச்சரவைப் பேச்சாளர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்
சில் துணி வழங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக ஆழமாக பார்க்கவேண்டும். இந்த சில் துணிகளுடன் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவான துண்டுப்பிரசுரங்களும் கடிகாரங்களும் வழங்கப்பட்டிருந்தன.
2014 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இதுதொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பியிருந்தார். மேலும் இந்த விடயத்தில் யாராவது வழக்குத்தாக்கல் செய்தால் தான் தன்னிடமிருக்கின்ற ஆதாரங்களை சமர்ப்பிப்பதாக அவர் கூறியிருந்தார்.
அந்த வகையில் இவ்வாறு தேர்தல் சட்டங்களை மீறக்கூடாது என அப்போதைய ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்கவே அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருந்தார். ஆனால் அவரே அந்த சட்டவிதிமுறைகளை மீறியிருக்கின்றார்.
இங்கு அதிகாரம் தவறாக பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. தேர்தல் ஆணையாளர் எச்சரிக்கை விடுத்தும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவேதான் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தீர்ப்பில் நீதிபதி சட்டமீறல்களை சரியான முறையில் விபரித்திருக்கின்றார்.
கேள்வி: சில் துணிகளை வழங்குமாறு தானே கூறியதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த தற்போது கூறியிருக்கிறாரே?
பதில்: அவர் தற்போது வீரன் போன்று பேசுவதில் அர்த்தமில்லை. அவரின் கூற்றைப் பார்க்கும்போது அவர் தவறு செய்திருப்பதாகவே தெரிகிறது. இந்த வழக்கு 24 நாட்களாக நீதிமன்றத்தில் நடைபெற்றது. அந்த நேரத்தில் மஹிந்த ராஜபக்ஷ நீதிமன்றத்தில் ஆஜராகி எதனையும் கூறவில்லை. அவ்வாறு கூறியிருந்தால் ஏதாவது நடந்திருக்கலாம்.
கேள்வி: தற்போது மஹிந்த இவ்வாறு கூறியுள்ளதால் 19 ஆவது திருத்த சட்டத்தின் கீழ் அவருக்கு எதிராக வழக்கு போட முடியுமா?
பதில்: 19 ஆவது திருத்த சட்டம் இல்லாவிடினும் கூட மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக தற்போது யாரும் வழக்குத் தாக்கல் செய்யலாம். அவர் தானே பொறுப்புக்கூறுவதாக தெரிவிப்பது தொடர்பாகவும் நீதிமன்ற அவமதிப்பு குறித்தும் வழக்குத்தாக்கல் செய்யலாம்.
கேள்வி: மகாசங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனவே?
பதில்: முதலில் மகாசங்கங்களில் யார் இருக்கின்றார்கள் என்று பார்க்கவேண்டும். தேங்காய் ஒன்று திருடிய மாணவிக்கு தண்டனை அளிக்கும்போது இந்த மகாசங்கம் எங்கே போனது. தனது தாயின் மருத்துவ செலவுக்காக மகன் ஒருவன் ஒருவரின் சங்கச் சங்கிலியை அறுத்தபோது அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டபோது இந்த மகாசங்கம் எனக்கூறப்படுவர்கள் எங்கே போனார்கள்.
கேள்வி: அமைச்சர் தயாசிறி ஜயசேகர லலித் வீரதுங்க தொடர்பில் அனுதாபம் தெரிவித்திருந்தார். ஏன்?
பதில்: (தயாசிறி) லலித் வீரதுங்க ஒரு திறமையான அரச அதிகாரி, எனவே அவர் இவ்வாறு செயற்பட்டமை தொடர்பில் நான் கவலை வெளியிட்டேன். அவ்வளவுதான் வேறு ஒன்றும் இல்லை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM