சுமார் நான்கு கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகளை தமது வயிற்றுப் பகுதியில் சூட்சுமமாக கட்டப்பட்டிருந்த வளையும் தன்மை கொண்ட பட்டி ஒன்றில் மறைத்து நாட்டுக்குள் கடத்திவந்த இரு பெண்களை நகைகளுடன் சுங்கப் பிரிவினர் கைது செய்தனர்.
டுபாயில் இருந்து நேற்று அதிகாலை 5.00 மணியளவில் கட்டுநாயக்கவை வந்தடைந்த யூ.எல்.226 எனும் விமானத்தில் வந்திறங்கிய கொழும்பைச் சேர்ந்த 41,49 வயதுகளை உடைய இரு பெண்களையே இவ்வாறு கைது செய்ததாக சுங்கப் பிரிவின் ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயரத்ன கேசரிக்கு தெரிவித்தார். இந் நிலையில் கைது செய்யப்பட்ட இருவரும் தடுத்து வைக்கப்பட்டு பிரதி சுங்கப் பணிப்பாளர் பராகிரம பஸ்நாயக்கவின் ஆலோசனைக்கு அமைய மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்ப்ட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நேற்று அதிகாலை 5.00 மணிக்கு டுபாயில் இருந்து வந்த இலங்கை விமான சேவைக்கு சொந்தமான குறித்த விமானம் தரை இறங்கியுள்ளது. இதன் போது தோற்றத்தில் இளமையைக் காட்டும் இரு பெண்கள் சாதரணமாக சுங்க பிரிவின் கண்காணிப்பைத் தாண்டி பயணிக்கும் போது, சுங்கப் பிரிவின் போதைப் பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதன் போது அவ்விரு பெண்களையும் சுங்கப் பிரிவின் அதிகாரிகள் மீள அழைத்து விசாரித்துள்ளனர்.
இதன்போது தாம் கொழும்பு பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் 41, 49 வயதுகளை உடைய பெண்கள் எனவும் தகவல்களை வெளிப்படுத்தியுள்ளனர். அவர்களில் ஒருவர் தான் சொத்துக்கள் தொடர்பிலான வர்த்தக ஆலோசகராக கடமையாற்றுவதாக தெரிவித்துள்ளார்.
இந் நிலையில் மேலதிக விசாரணை மற்றும் சோதனைகளின் போது அப்பெண்களின் வயிற்றுப் பகுதியில் சூட்சுமமாக வளையக் கூடிய பட்டியொன்று அணியப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து அது தொடர்பில் முன்னெடுத்த மேலதிக நடவடிக்கையில் அந்த பட்டிகளில் 8 பைகளில் தங்க நகைகள் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டது.
இதனையடுத்து அவ்விரு பெண்களையும் கைது செய்துள்ள சுங்கப் பிரிவின் விசாரணையாளர்கள், அவர்களை தடுத்து வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.
அப்பெண்களிடம் இருந்து 7700 கிராம் நிறைக் கொன்ட 4 கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகள் இதன்போது சுங்கப் பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் பராகிரம பஸ்நாயக்கவின் மேற்பார்வையில் சுங்க விசாரணைப் பிரிவின் விசாரணையாளர்களான நுவன் அபேநாயக்க, ரசிக சமஞித், ஸ்ரீ லால் விஜேவர்தன உள்ளிட்டோரின் கீழான குழுவினரால் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM