கருச்­சி­தைவு இலங்­கையில் சட்­ட­பூர்­வ­மாக அனு­ம­திக்­கப்­பட வேண்­டுமா? இல்­லையா?

Published By: Robert

13 Sep, 2017 | 11:39 AM
image

கருச்­சி­தைவு பற்றி பல நாடு­களில் சார்­பா­கவும் எதி­ரா­கவும் கருத்­துகள் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன. இலங்­கையில் எதி­ரான கருத்­து­களே வேரூன்­றி­யுள்­ளன. ஆயினும் தற்­கால உலகில் நடை­பெறும் சம்­ப­வங்­களால் இலங்­கையில் கருச்­சி­தைவு சட்­ட­பூர்­வ­மாக அங்­கீ­க­ரிக்­க­ப்­பட வேண்டும் என்ற கருத்து மெல்லத் துளிர்ந்து வரு­கி­றது. ஆகவே நாம் இரண்டு கருத்­து­க­ளையும் அறிந்து கொள்­வது காலத்தின் தேவை­யாகும்.

வாச­கர்­க­ளிடம் மன்­னிப்பு

கருச்­சி­தைவு பற்றி அறிய வேண்­டி­ய­வர்கள் படித்­த­வர்­களை விட பாமர மக்­க­ளே­யாவர். ஆகவே இக்­கட்­டுரை அவர்­களும் சரி­யாக விளங்கிக் கொள்­வ­தற்­காக நாட்டு வழக்கில் பாவிக்­கப்­படும் சில சொற்கள் இக்­கட்­டு­ரை­யிலும் பாவிக்­கப்­பட்­டுள்­ளன. அச் சொற்கள் பாவிக்­கா­விட்டால் பாமர மக்கள் கருச்­சி­தை­வுக்கு அடிப்­ப­டை­யான கார­ணத்தை சரி­யாக புரிய மாட்­டார்கள். ஆகவே அச்சொல் பாவிக்­கப்­ப­டு­வ­தற்கு மன்­னிப்பு கோரு­கிறேன். எல்­லோ­ரையும் விட அறிவு குறைந்த மக்­களே தமது குடும்ப மானத்தைக் காப்­பாற்ற வேண்டும் என்ற எண்­ணத்தில் தவ­றான முறையில் கருச்­சி­தைவு செய்ய முயன்று உயிரை இழக்­கின்­றனர். இக்­கா­ர­ணத்­தி­னால்தான் அவர்­களின் மனதில் இங்கு கூறப்­படும் கார­ணங்கள் பதி­யப்­பட வேண்­டு­மென்று இக்­கட்­டு­ரையை எழு­தி­யுள்ளேன்.

கருச்­சி­தைவு ஏன் செய்ய வேண்டும்?

கருச்­சி­தைவு ஏன் செய்ய வேண்டும் என்­ப­தற்கு வைத்­தி­யர்கள் ஒரு கார­ணத்தைக் கூறுவர். கருத்­த­ரித்­துள்ள பெண்ணின் உடல் நிலை கருவைத் தாங்­கவும் பெற்­றெ­டுக்­கவும் இடம் கொடுக்கும் நிலையில் இல்லை என்­பதால் அவர்கள் கருச்­சி­தை­வுக்கு ஆலோ­சனை கூறு­கின்­றனர். உதா­ர­ண­மாக இந்­தி­யாவில் 13 வயதில் கருத்­த­ரித்த ஒரு பெண் குழந்தை கருச்­சி­தைவு செய்ய அனு­ம­திக்­கப்­பட்­டதை நாம் அறிவோம். ஆகவே வைத்­தி­யர்கள் கூறும் காரணம் நியா­யப்­ப­டுத்த கூடி­ய­தாகும்.

விகா­ர­மான குழந்தை அல்­லது 

பூர­ண­மா­காத குழந்தை

(Abnormal Fortus)

இன்­னு­மொரு காரணம் விகா­ர­மான அல்­லது அவ­யங்­களில் குறை­பா­டு­டைய குழந்­தை­யாக உரு­வெ­டுக்கும் சிசுக்­களை பிறப்­ப­தற்கு முன்­னரே அழிக்க வேண்டும் என்ற எண்ணம் தற்­கா­லத்தில் பிறக்கப் போகும் குழந்தை என்ன குழந்தை? ஆணா? பெண்ணா? எனப் பார்ப்­ப­தற்கும் அக் குழந்­தையும் உடல் அம்­சங்­களின் வளர்ச்­சியைப் பார்ப்­ப­தற்கும் வச­திகள் உண்டு. ‘ஸ்கான்’ என அழைக்­கப்­படும் முறையில் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட இயந்­திரம் மூலம் இதனைக் கண்டு பிடிக்­கலாம். அப்­ப­டி­யான ஒரு நிலையில் அதா­வது விகா­ர­மாக அல்­லது அங்கக் குறை­பா­டு­க­ளுடன் ஒரு குழந்தை பிறந்து வாழ்­வதை விட அக்­கு­ழந்தை பிறப்­ப­தற்கு முன்­னரே கர்ப்பப் பையில் இருக்­கும்­போதே அழித்து விடு­வது அக் குழந்­தைக்கும் பெற்­றோ­ருக்கும் நல­மா­ன­தாக இருப்­பதால் அத்த­கைய சிசுவை பிறப்­ப­தற்கு முன்­னரே கருச்­சி­தைவு செய்து அழிக்க வேண்டும் என்ற எண்ணம் பெற்­றோ­ருக்கு உண்­டாகி விடு­கின்­றது. இதுவும் நியா­யப்­ப­டுத்­தக்­கூடிய கார­ண­மாகும்.

பாலியல் வல்­லு­றவால் பிறக்கும் குழந்­தைகள்

இன்­னு­மொரு காரணம் பாலியல் வல்­லு­றவால் ஒரு பெண்­ணுக்கு கருத்­த­ரித்தால் அக்­கு­ழந்­தையின் நிலை எப்­படி இருக்கும். சமூ­கத்தில் ஒடுக்­கப்­பட்ட குடும்பத் தாயா­கவும் குழந்­தை­யா­க­வுமே அவர்கள் இருப்பர். தற்­கா­லத்தில் பாலியல் வல்­லு­றவு பரந்த அளவில் நடை­பெ­று­கி­றது. தரா­தரம் பார்க்­காமல் காரி­யா­ல­யங்­களில்,  பாட­சா­லை­களில் மற்றும் வேலைத்­த­லங்­களில், அயல் வீடு­களில், சமய குர­வர்­களின் மத்­தியில் மற்றும் எல்லா இடங்­க­ளிலும் பாலியல் வல்­லு­றவு நடை­பெ­று­கி­றது.

மிகச் சமீ­பத்தில் நான் வீர­கே­சரி பத்­தி­ரி­கையில் வாசித்த செய்தி ஒன்­றின்­படி ‘சந்­தியா’ என்ற பாட­சாலை மாணவி தனது உயர்­தர பரீட்­சையை முடித்­து­விட்டு சந்­தோ­ச­மாக வீட்­டுக்கு வந்து TV பார்த்துக் கொண்­டி­ருக்­கும்­போது ஒரு பாதகன் அவ­ளது வீட்­டிற்குள் சென்று பாலியல் வல்­லு­றவு புரிந்­தது மட்­டு­மல்ல, அவளைக் கொலையும் செய்தான். இவள் பரீட்­சையின் பின்னர், தான் எந்த தொழி­லுக்குப் போக வேண்டும் எப்­படி வாழ வேண்டும் என்­றெல்லாம் கனவு கண்­டு­கொண்­டி­ருந்­தி­ருப்பாள். பாதகன் அதை­யெல்லாம் ஒரு நொடிப் பொழுதில் அழித்­து­விட்டான். இவள் உயி­ருடன் இருந்­தி­ருந்தால் அவ­ளுக்கு கருச்­சி­தைவு செய்ய சட்டம் இடம் அளிக்­குமா? இல்லை. அவள் சமூ­கத்தில் ஒதுக்­கப்­பட்­ட­வ­ளாக அல்­லது தினமும் கேவ­ல­மான பேச்­சுக்­களைக் கேட்ட வண்­ணமே இருக்க வேண்டும். ஆகவே பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­பட்ட பெண் குழந்­தை­களின் சிசுவை அழிக்க முயற்­சிப்­ப­தையும் நாம் நியா­யப்­ப­டுத்­தலாம்.

கர்ப்­பிணி தாயின் உயி­ருக்கு ஆபத்து Mother Facing Threat to her Life from Pregnancy

இன்­னு­மொரு காரணம் ஒரு கர்ப்­பிணித் தாய் தனது குழந்­தையை ஏறக் குறைய 10 மாதம் சுமக்­கும்­போது பல துன்­பங்­க­ளுக்கு ஆளாவாள். சில வேளை­களில் அவள் இறந்தும் போவாள். அப்­ப­டி­யி­ருக்­கும்­போது அவள் விருப்­பத்­துடன் கருச்­சி­தைவு செய்வாள் என்று கூற முடி­யாது. ஆயினும் அவள் கருச்­சி­தைவு செய்­யா­விட்டால் அவ­ளது குழந்தை பிறக்கும். அவள் இறந்து விடுவாள். தாயில்லா குழந்­தை­யாக அக் குழந்தை வளரும். தாய் இல்லா குழந்தை தறு­த­லை­யாகும் என்று சிலர்­கூ­று­வ­துண்டு. ஆனால் தாயில்லாக் குழந்­தை­யாக வளரும் குழந்­தைகள் எல்லாம் கெட்­ட­வர்­க­ளாக வளர்­வ­தில்லை. மிக அறி­வா­ள­னா­கவும் உலகம் போற்­று­ப­வ­னா­கவும் வரலாம். இதற்கு ஒரு உதா­ரண மனி­த­னாக லிய­னாடோ டாவின்சி விளங்­கு­வதை நாம் காணலாம்.

ஒரு பாட­சா­லையில் ஆசி­ரியர் கற்­பித்துக் கொண்டு இருக்கும் போது ஒருநாள் ஆசி­ரியர் சிறு­வ­குப்­பா­ரிடம் ஒவ்­வொ­ரு­வரும் உங்­க­ளது தாயாரின் படத்தை வரைந்து எனக்குக் காட்­டுங்கள் என்று கூறி­ய­போது ஒரு­வரைத் தவிர மற்ற எல்­லோரும் வரைந்து காட்­டினர். ஆசி­ரியர்  வரை­யாத மாண­வ­னிடம் நீர் ஏன் வரை­ய­வில்லை என்று கேட்­ட­போது எனக்கு அம்மா இல்லை. நான் அம்­மாவைக் கண்­ட­தில்லை என்று கூறினான். ஆசி­ரியர் அம்­மாண­வனைத் தேற்­று­வ­தற்­காக மாண­வனின் வீட்­டுக்குச் சென்­ற­போது அம் மாண­வனின் அறையில் பல பெரிய படங்கள் கீறப்­பட்டு இருந்­தன. அனைத்தும் பெண் தாயார்­களின் படங்கள். ஆசி­ரியர் மாண­வ­னிடம் இவர்கள் யார் என்று கேட்க இவர்­களில் ஒருவர் எனது அம்­மா­வாக இருக்க மாட்­டார்­களா? என கற்­பனை பண்ணி நான் வரைந்­துள்ள படங்­களே என்று கூறினான். இவன் வேறு யாரும் இல்லை. உலகப் பிர­சித்­தி­பெற்ற டிய­னாடோ டாவின்சி ஆவார். ஆகவே தாயில்லாக் குழந்­தைகள் தறு­த­லை­யாகும் என்­பதை ஏற்க முடி­யாது. எனவே வைத்­தி­யர்­களின் ஆலோ­ச­னைப்­படி உயி­ருக்கு ஆபத்து என்று கரு­தினால் தாயா­ருக்கு கருச்­சி­தைவு செய்ய இட­ம­ளிப்­பது நியா­ய­மா­னது.

கருச்­சி­தைவை நியா­யப்படுத்­தலாம் என்­பது பற்றி

மேலே கூறிய கார­ணங்­க­ளினால் அதா­வது பாலியல் வல்­லு­றவு விகா­ர­மாக உரு­வாகும் சிசுவை தாயின் உயி­ருக்கு ஆபத்து என்ற சந்­தர்ப்­பங்­களில் கருச்­சி­தைவு செய்ய அனு­ம­திப்­பதில் தவறு இல்லை என்று கூற வேண்டும். ஆயின் கருச்­சி­தைவை கீழைத்­தேய நாடுகள் ஆத­ரிப்­ப­தில்லை. அவர்­க­ளது ஆன்­மீக கலா­சார வாழ்க்­கையே அதற்குக் கார­ண­மாகும். மேலே கூறிய கார­ணங்­களை வெகு­வாக எதிர்ப்­ப­வர்கள் மிகக்­கு­றைவு. ஆயினும் சட்­டத்தில் கருச்­சி­தை­வுக்கு இட­மில்லை.

கருச்­சி­தை­வுக்கு இடம் தரப்­பட வேண்டும்  என்­ப­வர்­களின் கருத்தைப் பார்ப்போம் மேலே கூறிய கார­ணங்கள் கருச்­சி­தை­வுக்கு ஆத­ர­வாக சமூ­கத்தால் அங்­கீ­க­ரிக்கக் கூடி­ய­வை­யாக இருந்­த­போதும் சமூகம் வெளிப்­ப­டை­யாக அங்­கீ­க­ரிக்க தயா­ரில்லை என்­பதை மனதில் கொள்ள வேண்டும்.

கருச்­சி­தைவை சட்­ட­பூர்­வ­மாக அங்­கீ­கரிக்க வேண்டும் என்­ப­வர்கள்  கூறும் கார­ணங்கள் கர்ப்­பப்பை ஒரு பெண்ணின் உடலில் உள்­ளது. ஒரு பெண் தனது உடலில் உள்ள உறுப்­புகளில் ஒன்றை மாற்ற வேண்­டு­மென்று விரும்­பினால் அதனை தடுக்கச் சட்­டத்தில் இட­மில்லை. பாலையே மாற்­று­வதை நாம் கேள்­விப்­பட்­டி­ருக்­கிறோம். முகங்­க­ளையே அழ­கு­ப­டுத்தி வேறு­ப­டுத்­து­வ­தையும் நாம் காணலாம். ஆகவே தனக்கு சொந்­த­மான கருப்­பையை Womb இல் உள்­ளதை அழிக்க தனக்கு உரி­மை­யில்லை என்­பது விக­ட­மா­னது. ஏனெனில் Womb தனக்கு சொந்­த­மா­னது என்று அவள் கூறு­வ­தாகும். இதனை ஏற்க முடி­யாது. ஏனெனில் Womb அவ­ளுக்கு சொந்­த­மாக இருக்­கலாம். ஆனால் அந்த Womb இல் உண்­டாகும் உயிர் சிசு அவ­ளுக்குச் சொந்­த­மா­ன­தல்ல. இதன் பொருள் என்­ன­வெனில் ஒரு குறித்த அளவு காலம் மட்­டுமே தான் பெற்­றெ­டுத்த குழந்­தைக்கு பெற்றோர் உரித்­தா­ள­ராக விளங்­கு­கின்­றனர். அவர்கள் பெரி­ய­வர்­க­ளாக மாறி தம்மைத் தாமே பரி­பா­லித்துக் கொள்­ளக்­கூ­டிய நிலைக்கு வந்த பின்னர் பெற்­றோ­ரி­ட­மி­ருந்து விடு­ப­டு­கின்­றனர். அவர்கள் விரும்­பி­ய­படி வாழலாம். ஆகவே ஒரு பெண்ணின் Womb இல் உண்­டாகும் குழந்தை பரி­பூ­ர­ண­மாக அவ­ளுக்குச் சொந்­த­மா­ன­தல்ல. சமூ­கத்­திற்கே சொந்­த­மா­னது. சமூ­கத்­திற்குச் சொந்­த­மான ஒன்றை ஒருவர் அழிக்க முடி­யாது. அதற்கு தண்­ட­னை­யுண்டு. இதனால் கருச்­சி­தைவு அங்­கீ­க­ரிக்க வேண்டும் என்ற தர்க்­கத்தை சமூகம் ஏற்­ப­தில்லை. 

மேலும் கருச்­சி­தைவை அங்­கீ­க­ரித்தால் உயிர்க்­கொலை ஒன்றை செய்­வதை சட்டம் அங்­கீ­க­ரிக்­கி­றது என்றே கொள்ள வேண்டும். எனவே கருச்­சி­தைவு செய்­ய­வேண்டும் என்ற கோரிக்­கைக்கு ஆத­ர­வில்லை.

கருச்­சி­தைவை ஏன் செய்­கி­றார்கள்

நாம் வாழும் சமூகம் சில அருஞ் செல்­வங்­க­ளான பண்­பு­க­ளையும் கலா­சா­ரத்­தையும் நமக்கு அளித்­துள்­ளது. அதில் ஒன்று குடும்பம் என்­பது ஆகும். குடும்பம் என்­பது ஆண் ஒரு­வனும் பெண் ஒருத்­தியும் இணைந்து வாழும் வாழ்­வாகும். இது குடும்­பத்­தாலும் மற்றும் சமூ­கத்­த­வர்­க­ளாலும் அங்­கீ­க­ரிக்­கப்­பட வேண்டும். அவர்கள் இரு­வரும் தாம்­பத்­திய வாழ்க்­கையில் ஈடு­பட்டு குழந்­தை­களை பெறும்­போது சமூகம் அதனை அங்­கீ­க­ரிக்­கி­றது. வளை­காப்பு சடங்கு தொடக்கம் பெயர் வைத்தல், பிறப்பு நாள் கொண்­டாட்டம் என்­ப­ன­வற்றை கொண்­டா­டு­கின்­றனர். இப்­ப­டி­யான சந்­தோ­ச­மான ஒரு நிகழ்­வுதான் குழந்தை உற்­பத்­தியும் பிறப்­பு­மாகும். ஆகவே இந்த குழந்­தையை கருச்­சி­தைவு செய்ய பெற்­றோரோ, தாய் தகப்­பனோ விரும்­பு­வார்­களா? ஒரு போதும் விரும்­ப­மாட்­டார்கள். அப்­ப­டி­யாயின் கருச்­சி­தைவை விரும்­புப­வர்கள் அல்­லது அனு­மதி கேட்­ப­வர்கள் யார்? எனப் பார்ப்போம்.

குடும்ப பண்­பு­க­ளுக்கு புறம்­பாக தரிக்கும் குழந்­தை­க­ளையே அழிக்க உரிமை கோரு­கின்­றனர். சில சம­யங்­களில் விவா­க­மா­காத இருவர் ஒரு­வ­ருடன் ஒருவர் ஆரம்­பத்தில் பழகி பின்னர் நெருங்கிப் பழகி அதன் பின்னர் மறை­வான முறையில் தாம்­பத்­திய உறவில் ஈடு­பட்டு விடு­கின்­றனர். இதன் பல­னாக இறை­வனே அவர்­களை உல­கிற்கு காட்டிக் கொடுக்க குழந்­தையை தரிக்க செய்து விடு­கிறான். 

இள வயதில் கண­வனை இழந்த பெண் பாலியல் இன்­பத்தை வேறு வழி­களில் பெறு­வ­துண்டு. இதனை கள்ளத் தொடர்பு என அழைப்பர். அப்­போதும் சில குழந்­தைகள் உண்­டா­கி­வி­டு­கின்­றன. 

இன்னும் சில சந்­தர்ப்­பங்­களில் கணவன் வேறு நாடு சென்று வாழும்­போது இடைப்­பட்ட காலத்தில் இன்­னு­மொ­ரு­வ­ருடன் நட்புக் கொண்டு குழந்தை தரித்து விடு­கின்­றனர். இதே­போல பல சந்­தர்ப்­பங்­களில் கணவன் – மனைவி என்ற சமூக அங்­கீ­கார உற­வுக்கு அப்பால் பல பெண்கள் கருவை வாங்கிக் கொள்­கின்­றனர்.

இவர்­களால் சமூ­கத்­திற்கு முகம் கொடுக்க முடி­யாது. குழந்­தையை தரிக்க செய்­த­வரும் ஏதோ சாக்கு போக்குக் கூறி சமா­ளித்து விடுவார். ஆகவே பெண்­ணா­னவள் தனது வயிற்றில் உள்ள சிசுவை அழிக்­கவே விரும்­புவாள். சில சந்­தர்ப்­பங்­களில் தானே உயிரை மாய்த்துக் கொள்வாள்.

மேலே கூறிய வகு­திக்குள் வரு­வோரே கருச்­சி­தைவை கோரு­கின்­றனர். இதனை சமூகம் அங்­கீ­க­ரிக்­குமா? என்­பதே பிரச்­சினை. இந்­தி­யா­விலோ இலங்­கை­யிலோ இதற்கு அங்­கீ­காரம் கிடைக்­காது. தகப்­ப­னில்லா குழந்தை என்ற பெயரை தாய் எடுத்துக் கொடுக்க மாட்டாள். ஆகவே தான் கருச்­சி­தைவை செய்ய அவள் முயற்­சிக்­கிறாள். இது ஒரு சமூகப் பிரச்­சினை. மற்றும் உடல் பிரச்­சி­னை­யாகும். உடல் பிரச்­சி­னை­க­ளான மது அருந்­துதல், புகை­பி­டித்தல், பிழை­யான பழக்க வழக்­கங்­களில் ஈடு­படல், ஆண் புணர்ச்சி என்­பன போன்­ற­வற்றை போல் இதுவும் ஒன்­றாகும். இதற்கு சட்ட அந்­தஸ்து கோர முடி­யாது.

இலங்­கையில் மேலே கூறிய கள்ள வழி­களில் விவாக அந்­தஸ்து இல்­லாமல் உற்­பத்­தி­யாகும் சிசுக்கள் 1000 அளவில் ஒரு நாளில் அழிக்­கப்­ப­டு­வ­தாக புள்ளி விப­ரங்கள் தெரி­விக்­கின்­றன.

களனி பல்­க­லைக்­க­ழக சமூ­க­வியல் பேரா­சி­ரியர் ஒரு­வரின் அறிக்­கையில் 658 பேர் அளவில் கருச்­சி­தைவு செய்­கின்­றனர் என தெரி­வித்­துள்ளார். இதன் படி பார்த்தால் ஒரு வரு­டத்தில் 240170 பெண்கள் கருச்­சி­தைவு செய்து கொள்­கின்­றனர். சட்­ட­வி­ரோ­த­மான முறையில் கருச்­சி­தைவு இருக்­கும்­போது இத்­த­கைய தொகை கருச்­சி­தைவு செய்தால் கருச்­சி­தைவை சட்­ட­பூர்­வ­மாக்­கினால் என்ன நடக்கும் என நினைத்துக் கூட பார்க்க முடி­யாது. எனவே சிதைவை சட்­ட­பூர்­வ­மாக்கக் கூடாது. சமீ­பத்தில் இந்­தி­யாவில் இருந்து எத்­த­னையோ ஆயிரம் கருச்­சி­தைவு மாத்­தி­ரைகள் இலங்­கைக்கு கொண்டு வரப்­பட்ட செய்­திகள் பத்­தி­ரி­கையில் வெளி­வந்­ததை நாம் காணலாம். ஆகவே கருச்­சி­தைவு தடுக்­கப்­பட முடி­யாத ஒன்று. ஆயினும் சட்­ட­பூர்­வ­மாக்க முடி­யாத ஒன்­று­மாகும்.

தொகுப்­புரை

கருச்­சி­தைவு கோரிக்­கைக்கு காரணம் கள்­ள­மாக அல்­லது கணவன் மனைவி தொடர்பு இல்­லா­த­வர்­க­ளி­டையே உண்­டாகும் சிசுவை அழிப்­ப­தற்­கா­கவே இருக்­கின்­றது. இது சமூகப் பிரச்­சி­னை­யாகும். இதனை இல­குவில் தீர்க்க முடி­யாது. முன்னாள் ஜனா­தி­பதி ஜே.ஆர். ஜய­வர்­தன அவர்கள் தனது தோட்­டத்­திற்குச் சென்­ற­போது அங்­குள்ள ஒரு நாய் அவரைக் கடிக்க வந்­த­போது தோட்ட வேலைக்­காரன் அருகில் இருந்து கல்லை எடுத்து அந்த நாய்க்கு எறிந்தான். நாய் ஓல­மிட்டு கொண்டு கதறி ஓடி­யது. உடனே ஒன்றும் கூறாத ஜே.ஆர். பின்னர் வேலைக்­கா­ரனை கூப்­பிட்டு நீ ஏன் நாய்க்கு கல்லால் அடித்தாய் என்று கேட்­ட­போது நான் கல்லால் அடிக்­கா­விட்டால் அது ஹாமுவை கடித்­தி­ருக்கும் என்று கூறினார். உடனே இனி அப்­படி நாய்க்கு அடிக்க வேண்டாம் என்று கூறினார். ஜே.ஆர். அவர்கள் மரண தண்­டனை இலங்­கையில் வரக்­கூ­டாது என்­ப­தற்கு இந்த நாய் இட்ட ஓலமும் ஒரு  காரணம் என்று ஒரு கட்­டுரை வந்­தி­ருந்­தது. நாய் இப்­பா­டு­பட்டால் மனிதன் கயிற்றில் தொங்­கும்­போது என்ன பாடு­ப­டுவான் என்று அவர் எண்­ணி­யி­ருக்க வேண்டும் என்று கூறலாம்.

அத்­த­கைய இலங்­கையில் சிசு­வொன்றை Womb மில் அழிக்க இடம் கொடுக்­கப்­ப­டுமா? என்­பது நினைத்துக் கூட பார்க்க முடி­யாத ஒரு விட­ய­மாகும். ஆகவே இங்கு செய்­யக்­கூடி­யது என்­ன­வெனில் அறி­வு­ரை­களை மக்­க­ளுக்கு வழங்­கு­வ­தாகும்.

1. முறை­யான பாலியல் அறிவை மாண­வர்­களின் பாட விதா­னத்தில் சேர்க்க வேண்டும்.

2. சமூக ஆர்­வ­லர்கள் பாலியல் அறிவை கிராம மட்­டத்தில் புகட்ட வேண்டும். குழந்தை தரிக்­காத செயற்கை முறை­களைப் புகட்ட வேண்டும். 

3. சட்­ட­வி­ரோ­த­மான முறையில் கருச்­சிதைவு செய்­வதால் ஏற்­படும் உயிர் இழப்­பு­க­ளைப்­பற்றி மக்­க­ளுக்குப் புகட்ட வேண்டும். கருச்­சி­தைவால் உண்­டாகும் இரத்தப் பெருக்கு கார­ண­மாக 12% மேற்­பட்டோர் இறக்­கின்­றனர். 50% மேற்­பட்ட பெண்கள் பல்­வேறு நோய்­க­ளுக்கு ஆளா­கின்­றனர் என்­பதை விளங்­கப்­ப­டுத்த வேண்டும். ஆண் – பெண் உறவின் இன்­பத்தை மறக்க முடி­யாது. அதேபோல் கருச்­சி­தை­வையும் அங்­கீக­ரிக்க முடி­யாது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54