இலங்கையிலுள்ள அனைத்து வயோதிப மத குருமார்களுக்கும் நல்லாட்சியின் கீழ் காப்புறுதித் திட்டத்தை வழங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
தேசிய பௌத்த அறிஞர் சபைக்கூட்டம் ஜனாதிபதி தலைமையில் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற போது முன்வைக்கப்பட்ட ஆலோசனைகளுக்கமையவே குறித்த விடயம் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டது.
இதன் போது தர்மாச்சாரியார் பரீட்சையில் சித்தியடைந்தோருக்கான நியமனம், வெளிநாடுகளில் இருந்து பௌத்த உயர் கல்விக்காக நாட்டினுள் வரும் பௌத்த பிக்குமார்களுக்கு சலுகைகள் வழங்குதல் மற்றும் விகாரைகளில் எஞ்சியிருக்கும் ஓலைச்சுவடிகளை பேணிப்பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பிலும் கலந்துரையாடி தீர்மானங்கள் எட்டப்பட்டதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
மேலும் தேசிய நல்லிணக்கத்தை மேம்படுத்தும் கல்வி வாய்ப்புகளை விரிவாக்கும் செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்வதற்காக தேசிய பௌத்த அறிஞர் சபை பிக்குமார் உள்ளிட்ட பௌத்த பிக்குமாரை உள்ளடக்கிய குழுவை உருவாக்குவது தொடர்பிலும் ஆராயப்பட்டு தீர்மானங்கள் எட்டப்பட்டது.
இவ் பௌத்த அறிஞர் சபை கூட்டத்தில் தேசிய பௌத்த சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் பேராசிரியர் வண கொட்டப்பிற்றியே ராகுல தேரர் பேராசிரியர் வண கல்லேல்லே சுமணசிறி தேரர் கலாநிதி வண அக்குரற்றியே நந்த தேரர் உள்ளிட்ட தேரர்களும் பௌத்த சாசன அமைச்சின் செயலாளர் சந்திரபிரம கமகே உள்ளிட்ட உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM