மட்டக்களப்பிலுள்ள பிரபல தனியார் வைத்தியசாலையின் கழிவுகளை மக்கள் குடியிருக்கும் உப்போடை பகுதியில் இன்று நண்பகல் 12 மணியளவில் மறைமுகமாக சிலர் போடுவதற்கு முயற்சித்த போது அப்பகுதி மக்களுக்கும் குப்பையை கொட்டுவதற்காக வந்தவர்களுக்கும் இடையில் முறுகல் நிலை தோன்றியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு வாவிக்கு முன்னால் கொட்டப்பட்ட கழிவு மூடைகளில் இரத்தம் படிந்த ஆடைகள் , பஞ்சுகள், சேலைன் மற்றும் ஊசி போன்ற பொருட்கள் காணப்பட்டுள்ளன.
எரிக்க வேண்டிய வைத்தியசாலை கழிவுகளை மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் கொட்டுவது நியாயமற்ற செயல் எனத் தெரிவித்து மக்கள் குழப்பமடைந்துள்ளனர்.
குறித்த முறை கேடுகளுக்கு தகுந்த நடவடிக்கையினை உரிய அதிகாரிகள் எடுக்க வேண்டும் என மக்கள் ஊடகங்கள் வாயிலாக கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM