பாதிக்கப்பட்டுள்ள மாந்தை கால்நடை வளர்ப்பாளர்கள்

Published By: Digital Desk 7

12 Sep, 2017 | 11:46 AM
image

மாந்தை, கிழக்கு பிரதேச மக்கள் கால்நடை வளர்ப்பை வாழ்வாதாரமாக கொண்டு காலை மாலை ஆகிய இரு வேளைகளிலும் நெஸ்லே நிறுவனத்திற்கு பாலை விற்பனை செய்து வருகின்றனர்.

நெஸ்லே நிறுவனம் தொடர்ந்து இரு வேலை பாலையும் மக்களிடம் கொள்வனவு செய்து வந்ததனால் மக்கள் தங்கள் நாளாந்த வருமானத்தை பெருக்கிக்கொள்ளும் நோக்குடன் கடன்களை பெற்று அதிக மாடுகளை கொள்வனவு செய்துள்ள நிலையில் நெஸ்லே நிறுவனம் மாலை நேரப்பால் கொள்வனவை திடீரென நிறுத்திக்கொண்டுள்ளது.

நெஸ்லே நிறுவனம் பால் கொள்வனவை நிறுத்திக்கொண்டமையால் பாண்டியன்குளம், செல்வபுரம், சிதம்பரபுரம் உட்பட பல கிராம மக்கள் மாலை நேரப் பாலை என்ன செய்வதென்று தெரியாது திண்டாடிக்கொண்டுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்கள் கருத்து தெரிவிக்கையில்,

"பாலின் வருமானத்தினை நம்பி தவணை முறையில் பெற்றுக்கொண்ட குளிரூட்டிக்கான மாதாந்த வட்டிப்பணத்தினையும் அதிக பாலை கரப்பதற்காக விலையுயர்ந்த தரமான பால் மாடுகளை வாங்குவதற்காக வங்கியில் பெற்ற கடனையும் செலுத்த முடியாமல் உள்ளோம். கடன் சுமை அதிகரித்தால் நாங்கள் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளுவோம்" என தெரிவித்தனர்.

பால் கொள்வனவு தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு பாதிக்கப்பட்ட மக்கள் வடமாகாண முதலமைச்சர், வடமாகாண பிரதி அவைத்தலைவர்,  வடமாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள பணிப்பாளர், முல்லைத்தீவு மாவட்ட செயலாளர், மாந்தைகிழக்கு பிரதேச செயலாளர், மாந்தை கிழக்கு கால்நடை வைத்திய அதிகாரி ஆகியோருக்கும்  நெஸ்லே நிறுவன பணிப்பாளருக்கும் தங்களது நிலையை சுட்டிக்காட்டி கடிதங்களை அனுப்பிவைத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31