மாந்தை, கிழக்கு பிரதேச மக்கள் கால்நடை வளர்ப்பை வாழ்வாதாரமாக கொண்டு காலை மாலை ஆகிய இரு வேளைகளிலும் நெஸ்லே நிறுவனத்திற்கு பாலை விற்பனை செய்து வருகின்றனர்.
நெஸ்லே நிறுவனம் தொடர்ந்து இரு வேலை பாலையும் மக்களிடம் கொள்வனவு செய்து வந்ததனால் மக்கள் தங்கள் நாளாந்த வருமானத்தை பெருக்கிக்கொள்ளும் நோக்குடன் கடன்களை பெற்று அதிக மாடுகளை கொள்வனவு செய்துள்ள நிலையில் நெஸ்லே நிறுவனம் மாலை நேரப்பால் கொள்வனவை திடீரென நிறுத்திக்கொண்டுள்ளது.
நெஸ்லே நிறுவனம் பால் கொள்வனவை நிறுத்திக்கொண்டமையால் பாண்டியன்குளம், செல்வபுரம், சிதம்பரபுரம் உட்பட பல கிராம மக்கள் மாலை நேரப் பாலை என்ன செய்வதென்று தெரியாது திண்டாடிக்கொண்டுள்ளனர்.
இவ்விடயம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்கள் கருத்து தெரிவிக்கையில்,
"பாலின் வருமானத்தினை நம்பி தவணை முறையில் பெற்றுக்கொண்ட குளிரூட்டிக்கான மாதாந்த வட்டிப்பணத்தினையும் அதிக பாலை கரப்பதற்காக விலையுயர்ந்த தரமான பால் மாடுகளை வாங்குவதற்காக வங்கியில் பெற்ற கடனையும் செலுத்த முடியாமல் உள்ளோம். கடன் சுமை அதிகரித்தால் நாங்கள் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளுவோம்" என தெரிவித்தனர்.
பால் கொள்வனவு தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு பாதிக்கப்பட்ட மக்கள் வடமாகாண முதலமைச்சர், வடமாகாண பிரதி அவைத்தலைவர், வடமாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள பணிப்பாளர், முல்லைத்தீவு மாவட்ட செயலாளர், மாந்தைகிழக்கு பிரதேச செயலாளர், மாந்தை கிழக்கு கால்நடை வைத்திய அதிகாரி ஆகியோருக்கும் நெஸ்லே நிறுவன பணிப்பாளருக்கும் தங்களது நிலையை சுட்டிக்காட்டி கடிதங்களை அனுப்பிவைத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM