தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் பிர­க­டனம்

Published By: Robert

12 Sep, 2017 | 10:06 AM
image

Image result for தேசிய டெங்கு ஒழிப்பு virakesari

செப்­டெம்பர் 20 முதல் 26 வரை­யான ஒரு­வார காலம் தேசிய டெங்கு ஒழிப்பு வார­மாகப் பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. இதன்­போது, டெங்கு ஒழிப்பு துப்­பு­ரவுப் பணிகள் நாட­ளா­விய ரீதியில் முன்னெடுக்­கப்­ப­ட­வுள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

நாட்டில் மழையுடன் கூடிய கால­நி­லையைத் தொடர்ந்து, டெங்கு நோய்த்­தாக்கம் அதி­க­ரித்­துள்­ள­தாக குறிப்­பிடப்படு­கின்­றது. வடக்கு, கிழக்கு, மலை­யகம் உட்­பட நாட்டின் அனைத்துப் பிர­தே­சங்­க­ளிலும் டெங்கு நோயா­ளர்கள் இனங்காணப்­பட்­டுள்­ளனர். 

இத­னை­ய­டுத்து, சுகா­தார அமைச்­சினால், டெங்­குநோய் தொடர்பில் பொது மக்­களின் விசேட கவனம் ஈர்க்­கப்­பட்­டுள்­ளது. செப்டெம்பர் 06ம் திகதி வரை­யான காலப்­ப­கு­தியில் நாட்டில் மொத்தம் 360 பேர் மர­ணித்­துள்­ள­தா­கவும் 148,898 பேர் டெங்கு நோய்த் தாக்­கத்­திற்­குள்­ளா­கி­யுள்­ள­தா­கவும் சுகா­தார அமைச்சின் தகவல் தெரி­விக்­கின்­றது. 

கொழும்பு, கம்­பஹா, களுத்­துறை, குரு­நாகல், புத்­தளம், இரத்­தி­ன­புரி, கேகாலை, காலி, மாத்­தறை, கண்டி, யாழ்ப்­பாணம், மட்­டக்­க­ளப்பு, திரு­கோ­ண­மலை மற்றும் கல்­முனை ஆகிய பிர­தே­சங்கள் டெங்கு அபாயப் பிர­தே­சங்­க­ளாக சுகா­தார அமைச்­சினால் கண்­ட­றி­யப்­­பட்­டுள்­ளது. குறித்த டெங்கு ஒழிப்பு வாரத்தில் சுமார் 3000 குழுக்கள் டெங்கு நுளம்பு ஒழிப்புப் பணியில் ஈடு­ப­ட­வுள்­ளன. ஜனா­தி­பதி விசேட செய­லணி, ஆயுதப் படை­யினர், சுகா­தார திணைக்­கள உத்­தி­யோ­கத்­தர்கள் உள்­ளிட்ட பல்­வேறு தரப்­பினர் பணியில் ஈடு­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளனர். வீடுகள், நிர்­மாணப் பணிகள் இடம்­பெறும் இடங்கள், மத ஸ்தாப­னங்கள், பாட­சா­லைகள் என்­பன டெங்கு பரவும் பிர­தான இடங்­க­ளாக இனங்­கா­ணப்­பட்­டுள்­ளன. 

காய்ச்சல் இரு நாட்­க­ளுக்கு நீடிக்­கு­மானால், அரு­கி­லுள்ள அரச வைத்­தி­ய­சா­லையில் அல்­லது தரம் வாய்ந்த வைத்­தி­ய­ரிடம் சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்­டு­மென பொது­மக்கள் அறி­வு­றுத்­தப்­ப­டு­கின்­றனர். அத்துடன், சிகிச்சை பெற்றும் காய்ச்சல் குணமடையாது நீடிக்குமானால் முறையான இரத்தப் பரிசோதனை அவசியமெனவும் டெங்கு தொடர்பில் அலட்சியம் வேண்டாம் எனவும் வலியுறுத்தப்படுகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 10:50:13
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11