பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் புகையிரத நிலைய மேடையில் வைத்து தனது மனைவியையும் இரு பிள்ளைகளையும் சுட்டுக்கொன்ற பின் னர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்ட விபரீத சம்பவம் பிரான்ஸில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.
பாரிஸ் நகரின் வடக்கே 70 மைல் தொலைவிலுள்ள நோயன் பிராந்தியத்தில் இடம்பெற்ற இந்தப் படுகொலைகளுடன் தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்தர் பாரிஸ் நகரிலுள்ள பொலிஸ் தலைமையகத்தில் பணியாற்றுபவர் எனக் கூறப்படுகிறது. அவர் தனது பணிக்கு தனக்கு வழங்கப்பட்டிருந்த துப்பாக்கியைப் பயன்படுத்தியே இந்த சூட்டை நடத்தியுள்ளார். தனது மனைவி, தனது பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு பிரிந்து செல்வதாக கூறிவிட்டு புறப்படத் தயாரானதையடுத்தே சினமடைந்த அந்தப் பொலிஸ் உத்தியோகத்தர் சூட்டை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேசமயம் அந்த தம்பதியரது ஏனைய 3 பிள்ளைகள் இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் அந்த தம்பதியின் 5 வயது இரட்டைப் பிள்ளைகளில் ஒரு பிள்ளை உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் விசாரணையை மேற்கொண்டுள்ளதாக தெரி வித்த உள்ளூர் விசாரணையாளர் வேர்ஜின் ஜிராட், மேற்படி சம்பவம் தீவிரவாதத்துடன் தொடர்புள்ளதா இல்லையா என உறுதிப்படுத்த மறுத்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM