சைட்டம் நிறுவனத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வைத்தியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் மலையகத்தில் உள்ள வைத்தியசாலைகளில் இன்று வைத்திய சேவைகள் செயலிழந்து காணப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மாலபே சைட்டம் தனியார் வைத்திய கல்லூரி தொடர்பிலான சர்ச்சைகளுக்கு, ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழுவிடமிருந்தும் தீர்வுகள் கிடைக்காததனால் இன்று முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை, 25 மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில், சுழற்சி முறையில் வேலைநிறுத்தப்போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்தவகையில், வைத்தியர்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருவதால், அட்டன் டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு தூர பிரதேசங்களிலிருந்து வருகை தந்த தோட்டத் தொழிலாளர்கள் பாரிய பிரச்சினைக்கு முகங்கொடுத்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
வெளிநோயளர் பிரிவு மற்றும் கிளினிக் முழுமையாக செயழிழந்ததனால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்குள்ளாகியுள்ளனர்.
எனினும் நோயளர்களின் நிலைமையை கருத்திற்கொண்டு அவசர சிகிச்சை பிரிவு மாத்திரம் இயங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தின் போது அரசாங்கத்திடமிருந்து சாதகமான பதில் கிடைக்காத பட்சத்தில் எதிர்வரும் 21 ஆம் திகதி மேலும் பல தொழிற்சங்கங்களை இணைத்துக்கொண்டு மாபெரும் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM