ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் 36 ஆவது கூட்டத் தொடரின் இன்றைய அமர்விலும் பலவந்தமாக காணாமல் ஆக்கப்படுதல் தொடர்பாக ஆராயும் ஐ.நா.வின் விசேட செயற்குழுவின் அறிக்கை தொடர்பில் விவாதிக்கப்படவுள்ளது.
நேற்றைய தினமும் இது தொடர்பில் விவாதிக்கப்பட்ட நிலையிலேயே இன்றைய தினமும் விவாதம் நடைபெறவுள்ளது.
இதன்போது இலங்கையில் காணாமல்போனோர் விவகாரம் குறித்தும் கருத்துக்கள் முன்வைக்கப்படுவதுடன் கேள்விகள் எழுப்பப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக இந்த பலவந்தமாக காணாமல் ஆக்கப்படுதல் தொடர்பாக ஐ.நா. விசேட செயற்குழுவின் பிரதிநிதிகள் கடந்த 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தனர்.
இதன்போது இலங்கையில் காணாமல்போனோர் தொடர்பான பல்வேறு விடயங்களை ஆராய்ந்திருந்தன. அந்த வகையில் கடந்த இரண்டு வருடங்களாக ஐ.நா.வின் இந்த விசேட செயற்குழு தாம் பயணம் செய்த நாடுகளின் காணாமல்போனோர் நிலைமை தொடர்பாக நீண்ட அறிக்கையொன்றை 36 ஆவது கூட்டத் தொடரில் சமர்ப்பித்திருக்கின்றது.
அந்த அறிக்கை தொடர்பிலேயே இன்றைய தினம் விவாதம் நடத்தப்படவுள்ளது. குறித்த அறிக்கையில் இலங்கை குறித்தும் ஒரு சில விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக தாம் 2015 ஆம் ஆண்டு இலங்கை விஜயத்தின் பின்னர் முன்வைத்த பரிந்துரைகள் காணாமல்போனோர் விவகாரத்தில் விரைவாக அமுல்படுத்தப்படவேண்டும் எனவும் காணாமல்போனோர் தொடர்பான அலுவலகம் விரைவில் அமுல்படுத்தப்படவேண்டும் எனவும் இந்த செயற்குழு அறிக்கையில் குறிப்பிட்டிருந் தது.
அந்தவகையிலேயே இன்றைய தினம் இந்த அறிக்கை தொடர்பான விவாதம் ஐ.நா. மனித உரிமை பேரவையில் நடை பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM