ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 36 ஆவது கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக ரியர் அட்மிரல் சரத் வீரசேகர நாளை ஜெனிவா பயணமாகவுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷ ஆகியோரின் விசேட ஆலோசனைக்கமைவாகவே அவர் ஜெனிவா பயணமாகவுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேர வையின் 36 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை குறித்த விவகாரங்கள் நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்படவில்லை. எனினும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் தமது உரைகளின்போது இலங்கை சம்பந்தமான கேள்விகளை எழுப்பவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை மனித உரிமைகள் அமைப்புகள் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரியவிற்கு எதிராக போர்க் குற்ற வழக்கு தாக்கல் செய்துள்ளன. அவ்விவகாரம் தொடர்பில் தற்போது சர்வதேசம் மிகுந்த அவதானம் செலுத்தியுள்ளது. அத்துடன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய இறுதிக் கட்டப் போர் நடவடிக்கைகளில் குற்றச் செயல்களில் ஈடுபட்டமைக்கான ஆதாரங்கள் உள்ளதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
எனவே அதனை அடிப்படையாகக் கொண்டு இலங்கை மீதான போர்க் குற்ற விவகாரம் இறுக்கமடையலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. எனினும் மனித உரிமைகள் பேரவையின் 36 ஆவது கூட்டத் தொடரில் இலங்கையிலிருந்து அமைச்சர்கள் குழு பங்கேற்கவில்லை. இவ்வா றான நிலையிலேயே ரியர் அட்மிரல் சரத் வீரசேகர ஜெனிவாவில் நடைபெறும் உப குழுக் கூட்டங்களில் பங்கேற்க ஜெனிவா சென்றுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM