இலங்கையில் நாளொன்றுக்கு எட்டு பேர் வீதம் தற்கொலை செய்து கொள்வதாகவும் இவ்வருடத்தின் முதல் அரையாண்டு காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 1500 க்கு மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சின் தேசிய தற்கொலை தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் பிரகடனப்படுத்தப்பட்ட 15 ஆவது சர்வதேச தற்கொலை எதிர்ப்பு தினம் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஒரு நிமிடம் பொறுங்கள் வாழ்க்கை மாறும் எனும்தொனிப்பொருளில் அனுஷ்டிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் இலங்கையில் தற்கொலைகளை கட்டுப்படுத்துவது தொடர்பில் உளவியல் வைத்திய நிபுணர் சந்திர மால டி சில்வா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இலங்கையில் நாளொன்றுக்கு எட்டு பேர் வீதம் தற்கொலை செய்து கொள்வதாகவும் இவ்வருடத்தின் முதல் அரையாண்டு காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 1500 க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் அறிக்கையின் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சர்வதேச ரீதியில் வருடமொன்றுக்கு 8 இலட்சம் பேர் வீதம் உயிரிழக்கின்றனர். அவர்களில் பலர் 25 முறைகளுக்கும் மேல் தற்கொலை செய்துகொள்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும் ஆய்வொன்றில் தெரிவிக்கின்றது. இலங்கையின் தற்கொலைகள் தொடர்பிலான பொலிஸாரின் ஆய்வறிக்கையின் அடிப்படையில் கடந்த 2015 ஆம் ஆண்டில் 2389 ஆண்களும், 669 பெண்களும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அத்துடன் 2016 ஆம் ஆண்டில் மாத்திரம் 2339 ஆண்களும், 686 பெண்களும் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில் இவ்வருடத்தின் முதல் அரையாண்டு காலப்பகுதியில் மாத்திரம் 1275 ஆண்களும் 322 பெண்களும் உயிரிழந்துள்ளனர்.
இலங்கையில் தற்கொலைகளை தடுப்பதற்கான தேசிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் அவர்களை பாதுகாப்பதற்கு 25 யுவன்பியச தேசிய அமைப்புக்கள் இயங்குகின்றன.
இந்நிறுவனங்கள் மூலம் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தை மாற்றி அவர்களின் மன அழுத்தத்தை குறைத்தல், நேர்மறை விடயங்களை சிந்திப்பதற்கு இடமளித்தல், இளைஞர்களின் திறன் அபிவிருத்தி உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டு தற்கொலைகளை கட்டுப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன என்றார்.
இதேவேளை தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் ரவிந்திர பெர்னாண்டோ தெரிவிக்கையில்,
கடந்த காலங்களை விட இலங்கையில் தற்போது தற்கொலை செய்து கொள்வோரின் வீதம் குறைவடைந்துள்ளது. குறிப்பாக கடந்த 1995 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வருட மொன்றுக்கு 8500 பேர் வரையில் தற்கொலைகளால் மரணித்தனர். எனினும் 2005 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு காலப்பகுதிக்குள் 3025 வரையில் பதிவாகியிருக்கின்றது.
தற்போது பாதிக்கப்படுவோர்களுக்கு போதைப்பொருள் கட்டுப்பாடு, முரண்பாடுகள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பி லான விழிப்புணர்வு திட்டங்கள் இளைஞர்களுக்கா திறன்விருத்தி போன்ற பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து அவர்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM