திருத்­தத்­துடன் 20 மீண்டும் பாரா­ளு­மன்றம் வரும்.!

Published By: Robert

11 Sep, 2017 | 09:19 AM
image

மாகாண சபை தேர்தல் குறித்­தான 20 ஆவது திருத்­தச்­சட்­ட­மூ­லத்தில் திருத்­தங்கள் செய்த பின்னர் மீண்டும் அதனை பாரா­ளு­மன்­றத்தில் கொண்டு வரு­வ­தற்கு அர­சாங்கம் உத்­தே­சித்­துள்­ளது. இதன்­படி விரைவில் குறித்த சட்­ட­மூலம் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­படும் என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரி­ய­வசம் தெரி­வித்தார்.

Image result for அகிலவிராஜ் காரி­ய­வசம் virakesari

அர­சி­ய­ல­மைப்பின் 20 ஆவது திருத்தச்­சட்­ட­மூலம் தொடர்பில் வின­வியபோதே அவர் கேச­ரிக்கு மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,

அனைத்து மாகாண சபை தேர்­தல்­க­ளையும் ஒரே தினத்தில் நடத்தும் நோக்கில் கடந்த மாத இறு­தியில் அர­சி­ய­ல­மைப்பின் 20 ஆவது திருத்­தச்­சட்­ட­மூலம் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்­டது. குறித்த சட்­ட­மூ­லத்தில் மாகாண சபை­க­ளுக்­கான  புதிய தேர்தல் முறைமை அறி­மு­கப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளது. அத்­துடன் குறித்த சட்­ட­மூ­லத்தின் பிர­காரம் மாகாண சபை­க­ளுக்­கான தேர்தல் திக­தியை   பாரா­ளு­மன்­றமே தீர்­மா­னிக்க வேண்டும் என குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

அர­சி­ய­ல­மைப்பின் 20 ஆவது திருத்­தச்­சட்­ட­மூலம் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்­ட­மையை   அடுத்து பல தரப்­பு­களில் இருந்து எதிர்ப்­புகள் வெளி­வந்த வண்­ண­மாக உள்­ளன. மாகாண சபை­களின் தேர்­த­லுக்­கான திக­தியை பாரா­ளு­மன்­றமே தீர்­மா­னிக்க வேண்டும் என்ற ஷரத்­திற்கு அர­சியல் கட்­சி­க­ளிடம் இருந்தும் மாகாண சபை­க­ளிடம் இருந்து பல கோணங்­களில் இருந்து எதிர்ப்­புகள் வெளி­வந்­துள்­ளன.

இதன்­படி வடக்கு, ஊவா, தென் உள்­ளிட்ட மாகாண சபை­களி்ல் குறித்த சட்­ட­மூலம் நிரா­க­ரிக்­கப்­பட்­டது. அதே­போன்று மேல் மற்றும் கிழக்கு மாகாண சபை­களில் குறித்த சட்­ட­மூ­லத்தின் மீதான விவாதம் ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ளது. தேர்தல் திக­தியை பாரா­ளு­மன்றம் தீர்­மா­னிப்­ப­தா­னது மாகாண சபையின் அதி­கா­ரங்­களை பறித்­தெ­டுக்கும் உத்தி என்று மாகாண முத­ல­மைச்­சர்கள் கடு­மை­யான எதிர்ப்­பினை வெளி­யிட்­டனர். 

இந்­நி­லையில் மாகாண சபை­க­ளுக்­கான தேர்தல் திகதி தேர்தல் ஆணைக்­கு­ழு­வுக்கு வழங்கும் வகையில் திருத்­தங்கள் செய்­யப்­பட்டு அர­சி­ய­ல­மைப்பின் 20 ஆவது திருத்­தச்­சட்டம் விரைவில் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்க அர­சாங்கம் உத்­தே­சித்­துள்­ளது.

இது தொடர்பில் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசமிடம் வினவிய போது,

மாகாண சபை தேர்தல் முறைமை குறித்தான 20 ஆவது திருத்தச்சட்டமூலம் திருத்தங்களுடன் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். எனினும் எப்போது சமர்ப்பிக்கப்படும் என்ற திகதி தெரியாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01