கரீபியன் தீவுகளைப் புரட்டிப் போட்ட அதிவேக இர்மா சூறாவளி தற்போது கியூபாவுக்கு நகர்ந்துள்ளதோடு, இதுவரை 20 பேர் அதன் சீற்றத்திற்கு பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் கியூபாவுக்கு தேனிலவு சென்றிருந்த தம்பதியினர் தங்களுக்கு நேர்ந்த அனுபவம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளனர்.
புதிதாக திருமணம் முடித்த சாம் லிவர்- செல்ஸியா என்ற தம்பதியினர் தேனிலவுக்காக கியூபா சென்றுள்ளனர்.2500 பயணிகளுடன் கியூபாவில் உள்ள கயோ கொகொ சொகுசு விடுதியிலிருந்து, வரடெரொ நகரத்துக்கு 8 மணி நேரம் பயணித்து சென்றதாக வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளனர்.
சாம் லிவர் கூறியதாவது,எங்கள் தேனிலவு நாங்கள் நரகத்திற்கு சென்றது போல உள்ளது.அதிகாரிகள் எங்களை 11 பஸ்களில் அழைத்து வந்தனர். எட்டு மணி நேரம் எந்த உணவும் இல்லாமல் பயணித்து வாராதேரோவை அடைந்தோம்.
நானும் என் மனைவியும் ஒரு விளையாட்டு அறையில் மற்ற சுற்றுலா பயணிகளுடன் சேர்ந்து தங்க வைக்கப்பட்டோம்.
எம்முடன் வந்த சிலரை புதன்கிழமையே இங்கிருந்து குறித்த நிறுவனம் வெளியேற்றி இருக்கிறது. அப்படி வெளியேறியவர்களில், சுற்றுலா பயணிகளை பாதுகாப்பாக வெளியேற்ற வேண்டிய அவர்களது ஊழியர்களும் உள்ளடங்கியுள்ளனர்.
இது ஒரு இழிவான, வெட்ககேடான செயல் ஆகும், மக்களை வெளியேற்றுவதில் இந்த சுற்றுலா நிறுவனம் பராபட்சம் பார்த்து பெரும் தவறு செய்கிறது.நாங்கள் இப்போது வரதெரோவில் சிக்கி இருக்கிறோம், ஒரு கெட்ட கனவு போல இதிலிருந்து மீள வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறோம் என்று கூறியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM