களுத்துறை, நாத்துபானை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி தாயும் மகனும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்று பிற்பகல் 02.10 மணியளவில் வரகாகொடையிலிருந்து ஹொரணை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் ஹொரணையிலிருந்து வரகாகொடை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த கெப் ரக வாகனமும் ஹேன்கொடை பாலத்தில்வைத்து நேருக்கு நேர் மோதியதிலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் வந்த தாயும் மகனும் தூக்கியெறியப்பட்டு களுகங்கையில் விழுந்துள்ளனர். இதன்போது அங்கிருந்தவர்கள் இவர்களைக் காப்பாற்ற முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் இருவருமே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
47 வயதான கந்தனலாகே தொன் தமரா புஷ்பகாந்தி என்ற தாயாரும் 24 வயதான பிரமித ரங்கிக ஹசலங்க என்ற அவரது மகனும் உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் மல்பேரிய அகலவத்தை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் உயிரிழந்தவர்களின் சடலங்கள் இன்றைய தினம் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுமெனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதன்போது சந்தேநபரான கெப் வாகனத்தின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM