இரணைத்தீவில் கடற்படையால் சுவீகரிக்கப்பட்ட மக்களுடைய காணிகளில் 189 ஏக்கர் காணியை அளந்து மிகவிரைவில் மக்களிடம் கையளிப்பதற்கு கடற்படை நடவடிக்கை எடுத்துவருவதாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் வீரகேசரி வாரவெளியீட்டுக்குத் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
இரணைதீவு மக்கள் கடற்படையால் அபகரிக்கப்பட்ட தமது சொந்தக் காணிகளில் குடியேறவேண்டும் என தொடர்ச்சியாக கோரிவருகின்றனர். அதற்கமைவாக அண்மையில் முழங்காவில் கடற்படை முகாமில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தலைமையில் விசேட கூட்டம் ஒன்று இடம்பெற்றது. அதில் முதற்கட்டமாக இரணைதீவிலுள்ள 189 ஏக்கரை அளவிடுவதற்கு கடற்படை இணங்கியுள்ளது. இது இரணை தீவு மக்களுக்குக் கிடைத்த முதல் வெற்றியாகும்.
அதன்பிரகாரம் நிலஅளவைத் திணைக்களத்துடனும் அது சார்ந்த வேறு நிறுவனங்களுடனும் இணைந்து கடந்த வாரமளவில் காணி அளப்பதற்கு ஏற்பாடுகள் இடம்பெற்றபோதும் அது நிறுத்தப்பட்டது. ஆனால், நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை முதற்கட்டமாக காணிகள் அளக்கப்படும்.
இவ்வாறு காணி அளக்கப்பட்டு விடுவிக்கப்பட்டால் அந்த மக்களும் இரணைத்தீவிலேயே மீன்பிடிக்கச் செல்லமுடியும். அங்கு ஒரு ராடார் கருவியை பொருத்திவிட்டு அதன் கதிர்வீச்சுக்கள் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என கடற்படையினர் சாக்குப் போக்குச் சொல்லி வருகின்றார்கள். ஆனால், கடற்படையினரும் அந்த ராடார் கதிர்வீச்சு படும் இடங்களில்தான் பணிகளை மேற்கொண்டவாறு இருக்கின்றனர். ஆகவே, இந்த ராடார் அங்கு ஒரு பிரச்சினையாகக் காணப்படாது. அவ்வாறு காணி விடுவிக்கப்பட்டு மக்கள் மீளக்குடியேறினால் மக்கள் அங்கு சென்று மீன்பிடியில் ஈடுபட முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM