கூட்டு எதிர்க்கட்சி எதிர்வரும் உள்ளூராட்சி மன் றத் தேர்தலில் தாமரை மொட்டு சின்னத்தைக் கொண்ட ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியூடாகப் போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக் ஷ உள்ளிட்ட கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கிடையிலான சந்திப்பு கடந்த வியாழக்கிழமை பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெற்றது. அதன்போதே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு கூட்டு எதிர்க்கட்சி ஏற்கனவே பல்வேறு வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. எனவே பிரதேச மட்டத்தில் அக்கட்சியைப் பலப்படுத்துவதற்கான பணிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மேலும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கூட்டு எதிர்க்கட்சியூடாகக் களமிறக்கவுள்ள அபேட்சகர்களில் அதிகளவானோர் ஏற்கனவே தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களில் சமுர்தி மற்றும் விவசாயத்துறை அதிகாரிகள் ஏராளமானோர் உள்ளடங்குவதாகவும் தெரியவருகிறது.
எனினும் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தல் திருத்தச் சட்டத்தினூடாக சமுர்த்தி மற்றும் விவசாயத்துறை அதிகாரிகள் தேர்தலில் போட்டியிடமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே அது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடந்த வியாழக்கிழமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் அமையப்பெற்றுள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அதன்போது உள்ளூராட்சிமன்ற தேர்தல் திருத்தச்சட்டத்தை மறுபரிசீலனை செய்யுமாறும் பிரதமரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM