மத்திய வங்கி விவகாரத்தில் தன் மீதும் தன் மகன் மீதும் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை முழுமையாக மறுப்பதாக பிரதமர் அலுவலகத்தின் செயற்குழு உப பிரதானி ரோஸி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
உண்மையை ஆராயாமல் செய்திகளை வெளியிட்ட ஊடகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வெளிநாட்டு பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ள நிலையில் மேற்படி விவகாரம் குறித்து அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியுள்ளார்.
அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
மத்திய வங்கியின் பிணைமுறி விவகாரம் தொடர்பில் ஆராய்வதற்கான கோப் குழுவினால் கண்டறியப்படும் தகவல்களை குறித்ததொரு தரப்பினர் சட்டவிரோதமான முறையில் மற்றுமொரு தரப்புக்கு வழங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த விவகாரத்தில் என்மீதும் என் மகன் மீதும் சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டுக்களை நாம் முழுமையாக புறக்கணிக்கின்றோம். எவ்வாறாயினும் மேற்குறிப்பிட்ட குற்றச்சாட்டுக்களை உறுதிப்படுத்தும் வகையிலான எந்தவொரு ஆதாரமும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தவர்களிடம் இல்லை.
இவ்வாறான தவறான பிரசாரங்களை செய்வது இந்நாட்டு ஊடகங்கள் இன்று அடைந்துள்ள மட்டமான நிலைமையையே வெளிப்படுத்துகின்றது. இவ்வாறான விடயங்களை தேடிப்பார்க்காமல் பிரதான தலைப்புக்களாக சுட்டிக்காட்டிய ஊடகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்போம்.
நாட்டுக்கு திரும்பியவுடன் விரைவில் நாம் இவ்வாறு நடவடிக்கை எடுக்க ஆவன செய்வோம் என அவர் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM