முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத்தொடர்பு ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் அனுஷ பெல்பிட்ட ஆகியோருக்கு எதிரான தீர்ப்பைக் கேட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க வியப்படைந்ததாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று தலதா மாளிகைக்குச் சென்று வழிபட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உள்ளடங்கலாக நாம் நேற்று (நேற்று முன்தினம்) பிரமதர் ரணில் விக்கிரமசிங்கவை பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் அமையப் பெற்றுள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினோம்.
அதன்போது உள்ளூராட்சி மன்ற தேர்தல் திருத்தச் சட்டமூலத்தினூடாக சமுர்த்தி மற்றும் விவசாயத்துறை அதிகாரிகளுக்கு உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதை தெளிவுபடுத்தினோம். மேலும் அது சம்பந்தமாக பரிசீலிக்குமாறு பிரதமரிடம் வேண்டிக்கொண்டோம்.
அத்துடன் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத்தொடர்பு ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் அனுஷ பெல்பிட்ட ஆகியோருக்கு எதிரான தீர்ப்பு சம்பந்தமாக மேன்முறையீடு செய்வதற்கு எதிர்பார்த்துள்ளோம்.
இதேவேளை குறித்த தீர்ப்பை கேள்விப்பட்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆச்சரியமடைந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM