வடகொரியாவின் அணு ஆயுத மற்றும் ஏவுகணை அச்சுறுத்தல்களை முறியடிக்க இராணுவ நடவடிக்கையை முன்னெடுப்பதை தான் விரும்பவில்லை எனவும் ஆனால் தான் அவ்வாறான நடவடிக்கையை முன்னெடுத்தால் அந்த நாள் வட கொரியாவுக்கு மிகவும் துன்பகரமான நாளாக அமையும் எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று முன்தினம் வியாழக்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வட கொரியாவின் ஆறாவது மற்றும் அதிசக்தி வாய்ந்த அணு குண்டுப் பரிசோதனையையடுத்து அந்நாட்டின் மீதான அமெரிக்காவின் இராணுவ பதிலடி தொடர்பில் நிராகரிக்க டொனல்ட் ட்ரம்ப் மீண்டும் மறுப்புத் தெரிவித்துள்ளார்.
“இராணுவ நடவடிக்கையானது நிச்சயமாக ஒரு தெரிவாக அமையலாம். அது தவிர்க்கப்படுமா? எதுவும் தவிர்க்க முடியாதது அல்ல" என டொனால்ட் ட்ரம்ப் கூறினார்.
“ நான் இராணுவ வழிமுறையில் செல்லாதிருக்கவே விரும்புகிறேன்" எனத் தெரிவித்த அவர், “நாம் அதனை (இராணுவ நடவடிக்கையை) வட கொரியா மீது பயன்படுத்தினால், அது வட கொரியாவுக்கு மிகவும் துன்பகரமான நாளாக அமையும்" என அவர் தெரிவித்தார்.
வட கொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான தருணம் இதுவல்ல என டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ள நிலையில், அவரது அரசாங்கத்தை சேர்ந்த சிேரஷ்ட உறுப்பினர்கள் வட கொரியா தொடர்பான இராஜதந்திர ரீதியான தீர்வுக்கான கதவு இன்னும் திறந்தேயிருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.
அதேசமயம் சர்வதேச கண்டனங்களையும் மீறி அணுகுண்டுப் பரிசோதனையை மேற்கொண்டுள்ள வட கொரியா ,ஐக்கிய நாடுகள் சபையின் புதிய தடைகள் மற்றும் அமெரிக்காவின் அழுத்தத்திற்கு எதிராக கடும் நடவடிக்கையை முன்னெடுக்கப் போவதாக எச்சரித்துள்ளது.
இந்நிலையில் சீனா வட கொரியாவுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் புதிய தடைகளை முன்னெடுக்க இணக்கம் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM