அக்­க­ர­ப்பத்­த­னையில் 5 வீடுகள் தாழி­றக்கம் : 20 பேர் வெளி­யேற்றம்

Published By: Priyatharshan

09 Sep, 2017 | 02:59 PM
image

அக்­க­ரப்­பத்­தனை பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட டொரிங்டன் தோட்­டத்­திற்கு சொந்­த­மான கல்­ம­துரை பிரிவு 6  ஆம் இலக்க தோட்­டத்­தொ­ழி­லா­ளர்­களின் தொடர்­கு­டி­யி­ருப்­பொன் றில் தொடர்ச்­சி­யாக பெய்து வரும் மழை­யினால்   ஐந்து வீடுகள் வரை தாழி­றங்­கி­யுள்­ளது.

இந்­நி­லையில் அங்கு வாழ்ந்த ஐந்து குடும்­பங்­களைச் சேர்ந்த 20 பேர் வரையில்  அரு­கி­லுள்ள சிறுவர் பரா­ம­ரிப்பு நிலை­யத்தில் நேற்­று ­முன்­தினம் மாலை முதல் தங்க வைக்­கப்­பட்­டுள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­தனர்.

தொடர்ந்து பெய்­து­வரும் மழை கார­ண­மாக அங்கு வசிக்கும் 22 குடும்­பங்­களைச் சேர்ந்த சுமார் 95 பேர் அவ­தான நிலைக்கு தள்­ளப்­பட்­டுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­ கின்­றது.

இக்­கு­டி­யி­ருப்­புக்­களில் உள்ள சுமார் 5ற்கும் மேற்­பட்ட வீடு­களில் பாரி­ய­ளவில் வெடிப்­புக்கள் ஏற்­பட்­டதன் கார­ண­மாக  இவ் ஐந்து குடும்­பங்­களை வெளி­யே­று­மாறு தோட்ட நிர்­வா­கமும், கிராம சேவ­கரும் அறி­வித்­த­தாக இம்மக்கள் தெரி­வித்­தனர்.  வெளி­யேற்­றப்­பட்­ட­வர்­க­ளுக்கு உலர் உணவு பொருட்கள் கிராம சேவகரினால் வழங்­கப்­பட்­டுள்­                                                ளன.

1926 ஆம் ஆண்டு கட்­டப்­பட்ட இக்­கு­டி­யி­ருப்பு கடந்த காலங்­களில் எவ்­வித புனர்நிர்­மா­ணமும் செய்­யப்­ப­டாத நிலையில் காணப்­ப­டு­வா­கவும், இதனால் மழைக்­கா­லங்­களில் வீட்­டினுள் கூரை­யி­லி­ருந்தும், பூமி­யி­லி­ருந்தும் மழை நீர் கசிந்து வரு­வ­தா­கவும், மழைநீர் கார­ண­மாக தூக்­க­மின்றி பல்­வேறு அசௌ­க­ரி­யங்­களை அனு­ப­வித்து வரு­வ­தாகவும் மக்கள்  கவலை தெரி­விக்­கின்­றனர்.

மழைநீர் மற்றும் நீர் கசிவு கார­ண­மாக இக்­கு­டி­யி­ருப்பு தாழ்ந்­துள்­ள­தா­கவும் இத்­தாழ்வு கார­ண­மாக தமது குடி­யி­ருப்­புக்­க­ளுக்கும், உயிர்­க­ளுக்கும், சொத்­துக்­க­ளுக்கும் ஆபத்து எற்­பட்­டுள்­ள­தா­கவும் இக்­கு­டி­யி­ருப்­புக்­களில் வாழ்­ப­வர்கள் சுட்­டிக்­காட்­டு­கின்­றனர்.

இது குறித்து தோட்ட நிர்­வாகத்­தி­டமும் அர­சி­யல்­வா­தி­க­ளி­டமும் தெரி­வித்த போதிலும், இது­வரை எந்த நட­வ­டிக்­கையும் எடுக்­க­வில்லை எனவும் ஆபத்­தான நிலையில் உள்ள தமது உயிர்­க­ளையும் சொத்­துக்­க­ளையும் காப்­பாற்ற உத­வு­மாறும் இது குறித்து சம்­பந்­த­ப்பட்ட அதி­கா­ரிகள் உரிய நட­வ­டிக்கை எடுக்­க வேண்டும் எனவும் இவர்கள் கோரிக்கை விடுக்கின்­ றனர்.

குறித்த பகு­தியில் ஏற்­பட்­டுள்ள தாழி­றக்கம் கார­ண­மாக வெளி­யேற்­றப்­பட்ட மக்கள் தங்க வைக்­க­பட்­டுள்ள இடத்தில் மின்­சார வச­தியோ, மல­சல கூட வச­தியோ, குடிநீர் வச­தியோ கிடை­யாது என்­பதால் கைக்குழந்­தை­க­ளுடன் உள்ள தாய்மார் பல்­வேறு அசௌ­க­ரி­யங்­க­ளுக்கு தொடர்ந்தும் முகம்கொடுத்து வருகின்றனர். 

இந்நிலையில்  மாணவர்கள் தமது கற்றல் நடவடிக்கைகளை தொடர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள் ளனர். 

ஆகையால் சம்பந்தப்பட்ட அதி காரிகள் முன்வந்து இது தொடர்பில் கவனம் செலுத்தி தமக்கான தீர் வொன்றை பெற்றுத்தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36