அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டொரிங்டன் தோட்டத்திற்கு சொந்தமான கல்மதுரை பிரிவு 6 ஆம் இலக்க தோட்டத்தொழிலாளர்களின் தொடர்குடியிருப்பொன் றில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையினால் ஐந்து வீடுகள் வரை தாழிறங்கியுள்ளது.
இந்நிலையில் அங்கு வாழ்ந்த ஐந்து குடும்பங்களைச் சேர்ந்த 20 பேர் வரையில் அருகிலுள்ள சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் நேற்று முன்தினம் மாலை முதல் தங்க வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக அங்கு வசிக்கும் 22 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 95 பேர் அவதான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படு கின்றது.
இக்குடியிருப்புக்களில் உள்ள சுமார் 5ற்கும் மேற்பட்ட வீடுகளில் பாரியளவில் வெடிப்புக்கள் ஏற்பட்டதன் காரணமாக இவ் ஐந்து குடும்பங்களை வெளியேறுமாறு தோட்ட நிர்வாகமும், கிராம சேவகரும் அறிவித்ததாக இம்மக்கள் தெரிவித்தனர். வெளியேற்றப்பட்டவர்களுக்கு உலர் உணவு பொருட்கள் கிராம சேவகரினால் வழங்கப்பட்டுள் ளன.
1926 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இக்குடியிருப்பு கடந்த காலங்களில் எவ்வித புனர்நிர்மாணமும் செய்யப்படாத நிலையில் காணப்படுவாகவும், இதனால் மழைக்காலங்களில் வீட்டினுள் கூரையிலிருந்தும், பூமியிலிருந்தும் மழை நீர் கசிந்து வருவதாகவும், மழைநீர் காரணமாக தூக்கமின்றி பல்வேறு அசௌகரியங்களை அனுபவித்து வருவதாகவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
மழைநீர் மற்றும் நீர் கசிவு காரணமாக இக்குடியிருப்பு தாழ்ந்துள்ளதாகவும் இத்தாழ்வு காரணமாக தமது குடியிருப்புக்களுக்கும், உயிர்களுக்கும், சொத்துக்களுக்கும் ஆபத்து எற்பட்டுள்ளதாகவும் இக்குடியிருப்புக்களில் வாழ்பவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இது குறித்து தோட்ட நிர்வாகத்திடமும் அரசியல்வாதிகளிடமும் தெரிவித்த போதிலும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் ஆபத்தான நிலையில் உள்ள தமது உயிர்களையும் சொத்துக்களையும் காப்பாற்ற உதவுமாறும் இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இவர்கள் கோரிக்கை விடுக்கின் றனர்.
குறித்த பகுதியில் ஏற்பட்டுள்ள தாழிறக்கம் காரணமாக வெளியேற்றப்பட்ட மக்கள் தங்க வைக்கபட்டுள்ள இடத்தில் மின்சார வசதியோ, மலசல கூட வசதியோ, குடிநீர் வசதியோ கிடையாது என்பதால் கைக்குழந்தைகளுடன் உள்ள தாய்மார் பல்வேறு அசௌகரியங்களுக்கு தொடர்ந்தும் முகம்கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் மாணவர்கள் தமது கற்றல் நடவடிக்கைகளை தொடர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள் ளனர்.
ஆகையால் சம்பந்தப்பட்ட அதி காரிகள் முன்வந்து இது தொடர்பில் கவனம் செலுத்தி தமக்கான தீர் வொன்றை பெற்றுத்தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM