நீர்க்கட்டணத்தில் அதிகரிப்புச் செய்ய வேண்டிய நிலைமை தோன்றியுள்ளது. அதனால் சமுர்த்தி பெறுகின்றவர்கள் பாதிக்கப்படாத வகையில் நீர்க்கட்டணத்தில் அதிகரிப்புச் செய்யவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் நகர திட்டமிடல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நீர்க்கட்டணத்தில் அதிகரிப்பு செய்ய வேண்டிய ஒரு சூழல் தற்போது தோன்றியுள்ளது. காரணம் சில பகுதிகளில் மழைவீழ்ச்சி அதிகமாக பதிவானாலும் வடக்கின் சில பகுதிகளில் வரட்சி நீடித்து வருகின்றது.
அவ்வாறான நிலைமையில் தற்போது நீர் சுத்திகரிப்பு செலவுகளும் அதிகரித்துள்ளன. இருப்பினும் அதனால் நீர்க்கட்டணங்களில் அதிகரிப்புக்கள் எதுவும் தற்போதுவரையில் செய்யப்படவில்லை.
தற்காலத்திலும் கூட 80 வீதமானவர்கள் பாதுகாப்பான நீர் நிலைகளிலிருந்து நீரை பெற்றுக்கொண்டாலும் 40 வீதத்தினர் மாத்திரமே குழாய் நீரை பெற்றுக்கொள்கின்றார்கள். இதனை 2020 ஆம் ஆண்டளவில் 60 வீதமாக அதிகரிக்க பெரும் பிரயத்தனங்களை அமைச்சு மேற்கொண்டு வருகின்றது.
அந்த செயற்பாட்டினை வெற்றிகரமாக முன்னெடுக்க தற்போது எமக்கு முதலீடுகள் அவசியமாகின்றது. காரணம் நாம் நீரை குழாய் வழியாக அனுப்பும் போது இடையில் வெடிப்புக்களோ அல்லது தடைகளோ ஏற்படும் பட்சத்தில் அவற்றை திருத்தியமைப்பதற்கு பெரும் நெருக்கடிகள் எமக்கு ஏற்படும். அதற்கான செலவும் அதிகமாகவே காணப்படுகின்றது.
அவ்வாறான நிலையிலும் கூட 1000 லீற்றர் நீரை வெறுமனே 12 ரூபாய்க்கு மாத்திரமே வழங்குகின்றோம். அவ்வாறிருக்கின்றபோது அரசாங்கத்தின் நீர் விநியோகத்திற்கான செயற்பாடு மிகவும் அதிகமாக காணப்படுகின்றமையினால் அதனை முகாமைத்துவம் செய்ய வேண்டிய நிலைமை தோன்றியுள்ளது.
அதன் காரணமாக தற்போது நீர் கட்டணத்தில் சிறு மாற்றம் செய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளது. ஆனால் இதனால் சமுர்த்தி பெறும் மக்கள் பாதிக்கப்படமாட்டார்கள் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM