சில் துணி விநியோக நடவடிக்கை தொடர்பில் அரச நிறுவனமான தொலைத்தொடர்பு ஆணைக்குழுவின் 600 மில்லியன் ரூபாவை பயன்படுத்தியமை தொடர்பில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டு 3 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்கவும், தொலை தொடர்புகள் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் அனுஷ பெல்பிட்டவும் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்கவின் தீர்ப்பை அடுத்து நேற்று முன்தினம் சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்ட மேற்படி இருவரும், நேற்று பகல் வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக வெலிக்கடை சிறைச்சாலையின் உயர் அதிகாரி ஒருவர் கேசரிக்கு தெரிவித்தார்.
V 18069 எனும் சிறை இலக்கத்தைக் கொண்ட லலித் வீரதுங்க சிறை வைத்தியசாலையின் மூன்றாவது வார்ட்டில் 7402 ஆம் இலக்க நோயாளர் ஓய்வெடுக்கும் கட்டிலிலும், V 18068 ஆம் இலக்க சிறை கைதி எண்னைக் கொண்ட அனுஷ பெல்பிட்ட 7401 ஆம் இலக்க ஓய்வெடுக்கும் கட்டிலிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.
லலித் வீரதுங்கவும், அனுஷ பெல்பிட்டவும் அவர்களுக்கு உள்ள நீரிழிவு நோயின் தாக்கம் காரணமாக இவ்வாறு சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலை பதிவேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த வார்ட்டில் ஏற்கனவே குற்றச் செயல்கள் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆர். துமிந்த சில்வா மற்றும் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சரண குணவர்தன உள்ளிட்ட பிரபலங்களும் சிகிச்சைப் பெற்று வருவதாக கூறப்படுகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM