நல்லாட்சி அரசாங்கம் நாட்டில் முன்னெடுக்கும் முறையற்ற ஆட்சியைப் பார்த்துக்கொண்டிருந்தது போதும். எனவே அரசாங்கத்திற்கு எதிராக களத்தில் இறங்க வேண்டிய சந்தர்ப்பம் தற்போது ஏற்பட்டுள்ளது. ஆகவே 1955 ஆம் ஆண்டு இடம்பெற்றதைப்போன்ற யுக மாற்றத்திற்கு நாம் தயாராகிவிட்டோம். அப்பயணத்தில் சகல பெளத்த தேரர்களும் இணைந்து கொள்ள வேண்டும்.
அப்பயணத்தில் குறுக்கிடும் சகல சவால்களையும் முகம்கொடுப்பதற்கு தாம் தயாராகிவிட்டதாக முத்தட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.
தாய்நாட்டை பாதுகாக்கும் அமைப்பு ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று நாரஹேன்பிட்டியிலுள்ள அபயராம விகாரையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகடியில்,
நல்லாட்சி அரசாங்கம் தேர்தலுக்கு முன்னர் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மேலும் அமரர் மாதுலுவாபே சோபித தேரரின் பூதவுடலுக்கு முன்னால் நின்றுகொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய உறுதிமொழியும் நிறைவேற்றப்படவில்லை.
அத்துடன் தற்போது நாட்டில் எப்போதுமில்லாதவாறு பெளத்த மதத்திற்கு எதிரான சதி முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. அச்சதி முயற்சிகள் சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்படுகின்றன. நல்லாட்சி அரசாங்கம் ஆரம்பத்தில் 48 தேரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தது. அவ்வாறான செயற்பாடு இதற்கு முன்னர் இடம்பெறவில்லை. மேலும் தற்போது அமைச்சர் பீல்ட்மாஷல் சரத்பொன்சேகா போன்றோர் தேரர்களுக்கு எதிரான கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இதேவேைள நாட்டில் மேற்கொள்ள வேண்டிய பல விடயங்கள் இருக்கும்போது அரசாங்கம் அதனைக் கைவிட்டு விட்டு நாட்டு வளங்களை விற்பனை செய்வதுடன் அவசியமற்ற அரசியல் அமைப்பைக் கொண்டு வந்து நாட்டை இரண்டாகப் பிளவுபடுத்துவதற்கு முயற்சிக்கிறது. ஆகவே இது தொடர்பில் சகலரும் விழித்து உரிய நடவடிக்கையில் இறங்க வேண்டும்.
மேலும் இலங்கையின் தனித்துவத்திற்கு பாதகம் ஏற்படுத்துவதற்கு முனைந்த ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் தேரர்கள் அதற்கெதிராக கிளர்ந்தெழுந்து நடவடிக்கை எடுத்துள்ளனர். அதனை வரலாறு நெடுகிலும் அவதானிக்க முடிகிறது. எனவே நல்லலாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகளை பார்த்துக்கொண்டிருந்து போதும். பணியில் இறங்க வேண்டிய தருணம் தற்போது ஏற்பட்டுள்ளது.
எனவே அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு தேரர்களாகிய நாம் தயாராகி விட்டோம். இப்பணியில் சகல தேரர்களும் இணைந்துகொள்ளவேண்டும். இதனை அடிப்படையாகக் கொண்டு தாய் நாட்டைப் பாதுகாக்கும் அமைப்பு பாதையாத்திரை ஒன்றை நடத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.
எதிர்வரும் 27 ஆம் திகதி தெவிநுவர ரஜமகா விகாரையில் பெளத்த வழிபாடுகளை நடத்துவதற்கு ஏற்பாடுசெய்துள்ளோம். அத்துடன் எதிர்வரும் 28 ஆம் திகதி அங்கிருந்து பாத யாத்திரையை ஆரம்பிக்கவுள்ளோம். பாதயாத்திரையின்போது சில இடங்களில் கூட்டங்களையும் நடத்துவதற்கும் திட்டமிட்டுள்ளோம்.
எதிர்வரும் 30 ஆம் திகதி பேலியகொடயிலிருந்து தொடரும் பாத யாத்திரை களனி விகாரை வரை செல்வதுடன் அங்கு சமய அனுஷ்டானங்களை செய்வதற்கும் ஏற்பாடுசெய்துள்ளோம்.
அது தவிர எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 8 ஆம் திகதி பண்டார நாயக்க மாநாட்டு மண்டபத்தில் மாநாடொன்றை நடத்தி அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்கும் எதிர்பார்த்துள்ளோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM