ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு அடுத்தவாரம் அமெரிக்கா செல்கின்றார்.
ஐக்கிய நாடுகள் சபையின் 72ஆவது பொதுச்சபைக்கூட்டத்தில் கலந்துகொள்ளும் நோக்கிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான குழுவினர் நியூயோர்க் செல்கின்றனர்.
இதன்போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உள்ளிட்ட அரச தலைவர்களை ஜனாதிபதி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத் தொடர் எதிர்வரும் 12 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 20ஆம் திகதியே பொதுச்சபையில் உரையாற்றவிருக்கிறார்.
அதேபோன்று இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ள ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மேர்க்கல், இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி, பிரிட்டிஷ் பிரதமர் திரேசா மே உள்ளிட்ட பல்வேறு தலைவர்களையும் சந்தித்து ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
மேலும் 20ஆம் திகதி உரையாற்றவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க செயற்பாடுகள், புதிய அரசியலமைப்பை உருவாக்கும் வேலைத்திட்டங்கள் போன்றவை தொடர்பாக உலகநாடுகளின் தலைவர்களுக்கு விளக்கமளிக்கவிருக்கிறார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM