நீர் கொழும்பு புதிய வீதியில் நேற்று இரவு சிறைச்சாலை பஸ் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியன நேருக்கு நேர் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்றவர்களுள் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மற்றையவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டள்ளார்.
குறித்த வாகன விபத்தில் உயிரிழந்தவரான 36 வயதுடையவர் ஒரு மாதங்களுக்கு முன்னரே திருமணபந்த்தில் இணைந்தவரென விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
குறித்த சிறைச்சாலை பஸ்ஸானது மகர சிறைச்சாலையிலிருந்து நீர்கொழும்பு நீதிமன்றிற்கு சென்றுகொண்டிருந்தது என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்த இளைஞன் அவுஸ்திரேலியாவிலுள்ள ஒரு ஹோட்டலொன்றில் பிரபல சமையல்காரர் என்றும் ஒரு மாதத்திற்கு முன்னரே அவருக்கு திருமணமாகியுள்ளது எனவும் தெரியவந்துள்ளது.
காலாவதியான அனுமதிப்பத்திரத்துடன் வாகனத்தை செலுத்தியமை, விபத்தை தடுக்க முயலாமை மற்றும் அதிக வேகத்துடன் வாகனத்தை செலுத்தியமை போன்ற குற்றசாட்டின் பேரில் சிறைச்சாலை பஸ் சாரதியை நீர்கொழும்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM