பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் சர்ச்சைக்குரிய பிணை முறி விநியோகம் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சற்று முன்னர் முன்னிலையாகியுள்ளார்.
வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காகவே அவர் அங்கு ஆஜராகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ், சர்ச்சைக்குரிய முறி விற்பனை தொடர்பில் மத்திய வங்கியிலுள்ள இரகசியத் தகவல்களை, ஏலம் இடம்பெறும் தினத்தில் மிக தெளிவாக தெரிந்து வைத்திருந்தார் என ஆணைக்குழுவில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
திறைசேரி பிணைமுறி மோசடி தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் (சி.ஐ.டி.) முன்பாக அர்ஜுன் அலோசியஸ் நேற்றைய தினமும் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அவருக்கெதிரான குற்றச்சாட்டுகள் குறித்து வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் ஆஜராகியிருந்தார்.
நேற்றைய விசாரணைகளின்போது தொலைபேசி அழைப்புக்களை அடையாளப்படுத்தும் முதற்கட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்படவில்லை. பேப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் சார்பில் முன்னிலையாகியிருந்த ஜனாதிபதி சட்டத்தரணியும் விசாரணையில் முன்னிலையாகமாட்டேன் என அறிவித்த நிலையில் தனது நேரடியான நிலைப்பாட்டை ஆணைக்குழுவிடம் மன்றில் தெரிவிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
நேற்று காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகிய பிணைமுறி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை பேப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்றதிகாரி கசுன் பலிசேனவின் சாட்சிப்பதிவுகளோடு ஆரம்பமாகியது. 2013 ஆம் ஆண்டிலிருந்து 2016 ஆம் ஆண்டு வரையில் பேப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் சார்பாக மேற்கொள்ளப்பட்ட கணக்குகள் அனைத்தும் இதன்போது மீளாய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அத்தோடு பேப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் தொலைபேசி அழைப்புக்கள் தொடர்பிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டிருந்தன.
பிணைமுறி விவகாரத்தின் முக்கிய காலகட்டமாக 2015 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் 2015 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதி கருதப்படுகின்றது. குறித்த காலப்பகுதியில் பேப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட பிணைமுறி தொடர்பான அனைத்து ஆவணக்காப்புக்களும் அது குறித்தான விடயங்களும் சாட்சிப்பதிவுகளுக்காக மீள்பரிசோதனை செய்யப்பட்டன.
இதன்பின்னர் பிற்பகல் 1.30 மணியளவில் சாட்சியமளிக்க வருகைத்தந்த அர்ஜூன் அலோசியஸ் சாட்சியமளிக்க அனுமதிக்கப்பட்டபோதும் தொடர் விசாரணைகள் நடைபெறும் என்பதால் முதற்கட்ட விசாரணைகளை மட்டுமே நேற்று ஆணைக்குழு ஆரம்பித்திருந்தது.
பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணைகளை செய்வதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட விசாரணை அணைக்குழுவின் உறுப்பினர்களான உயர் நீதிமன்ற நீதியரசர் கே.டீ. சித்திரசிறி, பி.எஸ் ஜெயவர்தன மற்றும் ஓய்வுபெற்ற பிரதி கணக்காய்வாளர் நாயகம் வேலுப்பிள்ளை கந்தசாமி ஆகியோர் முன்னிலையில் இந்த விசாரணைகள் இடம்பெற்றன.
இந்நிலையில், அர்ஜுன் அலோசியஸ் மீண்டும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சற்று முன்னர் முன்னிலையாகியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM