பளைப் பிரதேசத்தில் பாரிய சத்தத்துடன் வெடித்த கிபிர்க்குண்டு

Published By: Priyatharshan

08 Sep, 2017 | 09:45 AM
image

பச்சிலைப்பள்ளி  பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட  வேம்போடுகேணி  கிராம அலுவலர் பிரிவிற்கு உட்பட்ட இந்திராபுரம் குடியிருப்புப் பகுதியில் நேற்றையதினம்  கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பிரிவினரால்  500 கிலோகிராம் நிறையுடைய கிபிர்க்குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இன்றையதினம் காலை முதல்  பளை பொலிசாரால்  குறித்த இந்திராபுரம் பகுதியில் இருந்து சுமார் இரண்டு கிலோமிற்றர் சுற்றளவில் உள்ள கிராம மக்களை வெளியேறுமாறும் நேற்று நான்கு மணிக்கு  பாரிய  குண்டு செயலிழக்கப்பட உள்ளதாகவும்  ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதுடன்  வயதானோர்களை  வாகனங்களிலும் பொலிசார் ஏற்றி அக் கிராமத்தை விட்டு அப்புறப்படுத்தியுள்ளனர்.

பின்னர்  இந்திராபுரம் பகுதிக்கு வருகைதந்த விமானப் படையினர் குறித்த கிபிர்க் குண்டினை  சுமார் பத்து அடிக் குழி ஒன்றினைத் தோண்டி அதனுள் வீழ்த்தி செயலிழக்கச் செய்துள்ளனர்.

செயலிழக்கச் செய்யும் பொழுது யாழ் கண்டி வீதியின் போக்குவரத்து முகமாலைப் பகுதியிலும் பளைப் பகுதியிலும்  நிறுத்தப்பட்டே  செயலிழக்கவைக்கும் பணி  இடம்பெற்றுள்ளது.

இதன்போது அதனை அண்டிய பகுதிகளில் பாரிய சத்தத்துடனும் அதிர்வுடனும் குண்டு வெடித்ததாக அயலில் உள்ள கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21
news-image

வீடு ஒன்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு...

2024-04-17 18:20:18