இரத்தினபுரி மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக இரத்தினபுரி நகரை அண்மித்த சில பிரதேசங்களிலும் குருவிட்ட, எஹலிய கொட, கரங்கொட, திமியாவ, தம்புலுவன, காஹவத்த, எலபாத்த, காங்கம ஆகிய பிரதேசங்களில் தாழ் நில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இரத்தினபுரி மாவட்டத்தில் வெள் ளம், மண்சரிவு அபாயம் இருப்பதால் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு இரத்தினபுரி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
மாவட்டத்தில் சீரற்ற காலநிலை தொடருமாயின் இரத்தினபுரி, பெல்மதுளை, கலவான, கிரியெல்ல. நிவித்திகல, குருவிட்ட, எஹலியகொட, அயகம, எலபாத்த பிரதேச செயலக பிரிவுகளில் மண்சரிவு அபாய பிரதேசங்களிலும் மலை பிரதேசங்களிலும் வாழும் மக்கள் அவ்விடத்தை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேற்படி மாவட்டத்தில் தொடர்ச்சியாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நேற்று இரத்தினபுரிமாவட்டத்தில் பெரும்பாலான அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், திணைக்களங்களில் சேவையாளர்களின் வருகை குறைவடைந்து காணப்பட்டதுடன் பாடசாலைகளிலும் ஆசிரியர் மாணவர்களின் வருகை குறைவடைந்து காணப்பட்டதையும் அவதானிக்க முடிந்தது.
கடும் மழை காரணமாக இரத்தினபுரி மாவட்டத்தில் அனைத்து பாடசாலைகளும் சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மஹிந்த எஸ்.வீரசூரியவின் அனுமதிக்கிணங்க நேற்று நண் பகல் 12 மணியுடன் மூடப்பட்டதுடன் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், திணைக்களங்களில் கடமையாற்றும் சேவையாளர்கள், ஊழியர்கள் நேரகாலத்துடன் வீடு திரும்பியமையும் குறிப்பிடத்தக்கது.
களுகங்கையின் நீர் மட்டம் தற்போது 6.45 அடிக்கு அதிகரித்து வருவதால் அப்பிரதேசங்களில் வாழும் மக்கள் அவதானத்துடன் இருக்மாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அத்தோடு இரத்தினபுரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்யுமானால் வெ ள்ளம் ஏற்பட கூடும் எனவே மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை அவிசாவளை புவக்பிட்டிய மற்றும் தல்துவ, பரகடுவ ஆகிய பிரதேசங்களில் வெள்ளம் காரணமாக இரத்தினபுரி கொழும்பு மற்றும் இரத்தினபுரி – கேகாலை வீதியில் போக்குவரத்து தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. அத்தோடு நிவித்திகல, களவான உட்பட பல பிரதேசங்க ளில் சிறியளவான மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளதுடன் இதில் எவ ருக்கும் பாதிப்புகள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM