இரத்­தி­ன­புரியில் வெள்ளம், மண்சரிவு அபாயம்

Published By: Robert

08 Sep, 2017 | 09:22 AM
image

இரத்­தி­ன­புரி மாவட்­டத்தில் தொடர்ச்­சி­யாக பெய்து வரும் அடை மழை கார­ண­மாக இரத்­தி­ன­புரி நகரை அண்­மித்த சில பிர­தே­சங்­க­ளிலும் குரு­விட்ட, எஹ­லி­ய­ கொட, கரங்­கொட, திமி­யாவ, தம்­பு­லு­வன, காஹவத்த, எல­பாத்த, காங்­கம ஆகிய பிர­தே­சங்­களில் தாழ் நில பகு­திகள் வெள்ளத்தில் மூழ்­கி­யுள்­ளன.

இரத்­தி­ன­புரி மாவட்டத்தில் வெள் ளம், மண்­ச­ரிவு அபாயம் இருப்­பதால் மக்கள் அவ­தா­னத்­துடன் இருக்­கு­மாறு இரத்­தி­ன­புரி மாவட்ட அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் அறி­வித்­துள்­ளது.

மாவட்­டத்தில் சீரற்ற கால­நிலை தொட­ரு­மாயின் இரத்­தி­ன­புரி, பெல்­ம­துளை, கலவான, கிரி­யெல்ல. நிவித்­தி­கல, குரு­விட்ட, எஹ­லி­ய­கொட, அய­கம, எல­பாத்த பிர­தேச செய­லக பிரி­வு­களில் மண்­ச­ரிவு அபாய பிர­தே­சங்­க­ளிலும் மலை பிர­தே­சங்­க­ளிலும் வாழும் மக்கள் அவ்­வி­டத்தை விட்டு பாது­காப்­பான இடங்­க­ளுக்கு செல்­லு­மாறு எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

மேற்­படி மாவட்­டத்தில் தொடர்ச்­சி­யாக நிலவும் சீரற்ற கால­நிலை கார­ண­மாக  நேற்று இரத்­தி­ன­புரிமாவட்­டத்தில் பெரும்பா­லான அரச மற்றும் தனியார் நிறு­வ­னங்கள், திணைக்­க­ளங்களில் சேவை­யா­ளர்­களின் வருகை குறை­வ­டைந்து காணப்­பட்­ட­துடன் பாட­சா­லை­க­ளிலும் ஆசி­ரியர் மாண­வர்­களின் வருகை குறை­வ­டைந்து காணப்­பட்­ட­தையும் அவ­தா­னிக்க முடிந்­தது.

கடும் மழை கார­ண­மாக இரத்­தி­ன­புரி மாவட்­டத்தில் அனைத்து பாட­சா­லை­களும் சப்­ர­க­முவ மாகாண கல்வி அமைச்சின் செய­லாளர் மஹிந்த எஸ்.வீர­சூ­ரி­யவின் அனு­ம­திக்­கி­ணங்க நேற்று நண் பகல் 12 மணி­யுடன் மூடப்­பட்­ட­துடன் அர­ச மற்றும் தனியார் நிறு­வ­னங்கள், திணைக்­க­ளங்­களில் கட­மை­யாற்றும் சேவை­யா­ளர்கள், ஊழி­யர்கள் நேர­கா­லத்­துடன் வீடு திரும்பி­ய­மையும்  குறிப்­பி­டத்­தக்­கது.

களு­கங்­கையின் நீர் மட்டம் தற்­போது 6.45 அடிக்கு அதி­க­ரித்து வரு­வதால் அப்­பி­ர­தே­சங்­களில் வாழும் மக்கள் அவ­தா­னத்­துடன் இருக்­­மாறு அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளனர். 

அத்­தோடு இரத்­தி­ன­புரி மாவட்­டத்தில் தொடர்ந்து மழை பெய்­யு­மானால் வெ ள்ளம் ஏற்­பட கூடும் எனவே மக்கள் அவ­தா­னத்­துடன் இருக்­கு­மாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இதே­வேளை அவி­சா­வளை புவக்­பிட்­டிய மற்றும் தல்­துவ, பர­க­டுவ ஆகிய பிர­தே­சங்­களில் வெள்ளம் கார­ண­மாக இரத்­தி­ன­புரி கொழும்பு மற்றும் இரத்தினபுரி  – கேகாலை வீதியில் போக்குவரத்து தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. அத்தோடு நிவித்திகல, களவான உட்பட பல பிரதேசங்க ளில் சிறியளவான  மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளதுடன் இதில் எவ ருக்கும் பாதிப்புகள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58