மனித ஆட்கடத்தலை தடுக்கும் வகையில் இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய குடிவரவு மற்றும் எல்லை பாதுகாப்பு செயலாளர் மைக்கேல் பீசுல்லோ மற்றும் இலங்கை பாதுகாப்பு செயலாளர் கபில வைத்தியரத்ன ஆகியோரால் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கிடையில் மனித ஆட்கடத்தல் செயற்பாடுகளை தடுக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வகையில் அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய குடிவரவு மற்றும் எல்லை பாதுகாப்பு செயலாளர் மைக்கேல் பீசுல்லோ மற்றும் இலங்கை பாதுகாப்பு செயலாளர் கபில வைத்தியரத்ன ஆகியோரால் கான்பெரா மாநாட்டில் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.
குறிப்பாக அவுஸ்திரேலியா தனது நட்பு நாடுகளுடன் இந்த உடன்படிக்கை செய்துகொள்ளும் நிலையில் மனித ஆட்கடத்தலை தடுக்கும் வகையில் இந்த உடன்படிக்கை இலங்கை உட்பட சர்வதேச நட்பு நாடுகளுடன் வலுவானதும் மற்றும் நட்புறவை பலப்படுத்தும் வகையில் இந்த உடன்படிக்கையை செய்துள்ளது.
இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு இடையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதில் இருந்து குறிப்பாக 2013 ஆம் ஆண்டில் இருந்து இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியாவிற்கு மனித ஆட்கடத்தல் முன்னெடுக்கும் நகர்வுகள் அனைத்தும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்த வெற்றி செயற்பாடுகள் தொடரவே இருநாட்டு அரசாங்கமும் உடன்படிக்கையை நீடித்து வருகின்றது.
இப்போது செய்துகொள்ளப்பட்டுள்ள இருநாட்டு உடன்படிக்கை மூலமாக எதிர்கால நகர்வுகளை தடுக்கவும் குறிப்பாக ஆட்கடத்தல், போதைப்பொருள் கடத்தல், மனித உரிமைகள் மீறல், சட்டவிரோதப் பொருட்களின் செயற்பாட்டை நிறுத்துதல், பணம் மோசடி செய்தல் மற்றும் குற்றம் ஆகியவற்றின் மீது இலக்கு வைத்தே பலமான வகையில் இந்த உடன்படிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆகவே ஆட்கடத்தல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் நகர்வுகளை தடுக்கும் செயற்பாட்டில் இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் மிக நீண்டகால நட்புறவுடனும் பாதுகாப்பு செயற்பாடுகளுடனும் இணைந்து செயற்பட்டு வரும் நிலையில் இவ்வாறான உடன்படிக்கைகள் மேலும் இரு நாட்டு உறவில் பலமாக அமையும் என இருதரப்பினரும் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM