பிணைமுறி விசாரணையில் முக்கியமான ஆதாரங்களாக கருதப்பட்ட பேப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் தொலைபேசி கலந்துரையாடல்களை தரவிலிருந்து அழிக்குமாறு கூறியது அந்நிறுவனத்தின் தலைவர் அர்ஜூன் அலோசியஸ் என நிரூபனமாகியுள்ள நிலையில், மத்திய வங்கியிலிருந்து பிணைமுறி தொடர்பிலான இரசிய தரவுகள் அர்ஜூன் அலோசியசுக்கு வழங்கப்பட்டுள்ளமை நேற்று கண்டறியப்பட்டுள்ளது.
முக்கியமான தரவுகள் அனைத்தும் அழிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று அழிக்கப்பட்ட தொலைபேசி அழைப்புக்கள் தொடர்பாடல் நிபுணர்களால் மீள பெறப்பட்டு அவற்றை ஆணைக்குழு செவிமடுத்திருந்தது. இதன்போது பேப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் தலைவர் அர்ஜூன் அலோசியசுக்கு பல தகவல்கள் வழங்கப்பட்டுள்ளமை அம்பலமானது.
அக்காலப்பகுதியில் மத்திய வங்கியின் ஆளுநராகவிருந்த அர்ஜூன் மகேந்திரன் செயற்பட்டமையால் அவரை ஆணைக்குழுவின் விசாரணைகளை பார்வையிடுவதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு அனுமதிக்கவில்லை.
பிணைமுறி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்றும் பேப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் விசாரணைகள் இடம்பெற்றிருந்தன. சர்ச்சைக்குரிய பிணைமுறி ஏலத்தின் முக்கிய முதலீட்டு நிறுவனமாக கருதப்படும் பேப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் அனைத்து வகையான கணக்குகளும் திணைக்களங்களும் பரீட்சிக்கப்படுமென ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பேப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனம் சார்பில் குறுக்கு விசாரணையாக அந்நிறுவனத்தின் பிரதான சந்தைப்படுத்தல் முகாமையாளர் நுவன் சல்காது நேற்று விசாரணைக்கென அழைக்கப்பட்டிருந்தார். இதன்போது அவரிடம் தொலைபேசி அழைப்புக்கள் தொடர்பான விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
நேற்று காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகிய பிணைமுறி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை பேப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்றதிகாரி கசுன் பலிசேனின் சாட்சிப்பதிவுகளோடு ஆரம்பமாகியது. 2013 ஆம் ஆண்டிலிருந்து 2016 ஆம் ஆண்டு வரையில் பேப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் சார்பாக மேற்கொள்ளப்பட்ட கணக்குகள் அனைத்தும் இதன்போது மீளாய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அத்தோடு பேப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் தொலைபேசி அழைப்புக்கள் தொடர்பிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
பிணைமுறி விவகாரத்தின் முக்கிய காலகட்டமாக கருதப்படும் 2015 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் 2015 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதி கருதப்படுகின்றது. குறித்த காலப்பகுதியில் பேப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட பிணைமுறி தொடர்பான அனைத்து ஆவணக்காப்புக்களும் அது குறித்தான விடயங்களும் சாட்சிப்பதிவுகளுக்காக மீள்பரிசோதனை செய்யப்பட்டன.
பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணைகளை செய்வதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட விசாரணை அணைக்குழுவின் உறுப்பினர்களான உயர் நீதிமன்ற நீதியரசர் கே.டீ. சித்திரசிறி, பி.எஸ் ஜெயவர்தன மற்றும் ஓய்வுபெற்ற பிரதி கணக்காய்வாளர் நாயகம் வேலுப்பிள்ளை கந்தசாமி ஆகியோர் முன்னிலையில் இந்த விசாரணைகள் இடம்பெற்றன.
கொழும்பு - புதுக்கடையில் உள்ள நீதியமைச்சின் கட்டிடத் தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள மேற்படி விசாரணை ஆணைக் குழுவின் விசாரணை அறையில் இந்த விசாரணைகளை ஆரம்பித்து முதலில் பிரதி சொலிசிஸ்ட்டர் ஜெனரல் மிலிந்த குணத்திலக்கவின் நெறிப்படுத்தலுடன் சாட்சி விசாரணைகள் ஆரம்பமாகின.
மேலும் மத்திய வங்கியில் இடம்பெற்றதாக கூறப்படும் பிணைமுறி விநியோகம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக பே்பபச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் தலைவர் அர்ஜூன் அலோசியசை முன்னிலையாகுமாறு ஜனாதிபதி ஆணைக்குழு அறிவித்துள்ள நிலையில் அலுவலகம் மற்றும் வீட்டுக்கு சென்றபோதிலும் அவரை சந்திக்க முடியவில்லை என குற்றவியல் விசாரணை திணைக்கள் அதிகாரிகள் நேற்று ஆணைக்குழுவில் அறிவித்தனர்.
மேலும் குறித்த விடயம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வழங்கிய பேப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் பிரதான சந்தைப்படுத்தல் முகாமையாளர் நுவல் சல்காதுவுக்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளை வழங்குமாறும் ஆணைக்குழு உத்தரவிட்டது. அத்தோடு சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிரேஸ்ட சொலிசிஸ்ட்டர் ஜெனரல் யசந்த கோதாகொடவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமையவே அவரது பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதேவேளை அர்ஜூன் அலோசியஸின் இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய கடவுச்சீட்டு இலக்கங்களை சட்டமா அதிபர் திணைக்களம் கோரியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM