பட்டிப்பொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா ஹோட்டன்தென்ன பிரதான வீதியில் பட்டிப்பொல 24 ஆம் கட்டைப்பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மூவர் படுங்காயங்களுக்குள்ளாகியிருப்பதாக பட்டிப்பொல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பட்டிப்பொலவிலிருந்து ஹோட்டன்தென்ன பகுதியை நோக்கி சென்ற முச்சக்கரவண்டியும் ஹோட்டன்தென்னவிலிருந்து பட்டிப்பொல பகுதியை நோக்கி சென்ற கார் ஒன்றுமே இவ்வாறு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
முச்சக்கரவண்டியில் பயணித்தவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுங்காயங்களுக்குள்ளாகி நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உயிரிழந்தவர் கேகாலை அரநாயக்க பகுதியை சேர்ந்த 20 வயதுடைய யூ.எல். சம்பத் சோமரத்ன என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
முச்சக்கரவண்டி சாரதி மதுபானம் அருந்தி முச்சக்கரவண்டியை வேகமாக செலுத்தியதினாலேயே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பட்டிப்பொல பொலிஸார் தெரிவித்தனர்.
முச்சக்கரவண்டி சாரதியையும், கார் சாரதியையும் கைது செய்துள்ளதாகவும், அவர்களை இன்று நுவரெலியா நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள் எடுத்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணகளை பட்டிப்பொல போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM