நீர்கொழும்பு மீன் சந்தையில் விற்க தயாராக இருந்த 272 கிலோகிராம் சவுக்கு சுறாமீன்களுடன் ஒருவர் கடற்படையினரால் செய்யப்பட்டுள்ளார் என கடற்படை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது .
கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் படி கடந்த 4ஆம் திகதி மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் மற்றும் கடற்றொழில், நீரியல் வள திணைக்களத்தின் உத்தியோகத்தர்களுடன் இனைந்து மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைப்பற்றப்பட்ட சவுக்கு சுறா மீன்களுடன், சந்தேகநபர் மேலதிக விசாரணைக்காக நீர்கொழும்பு மீன்பிடி மற்றும் நீரியல் வள திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளாா்.
கடற்றொழில் மற்றும் நீரியல் வள சட்டத்தின் கீழ் மீனவர்களுக்கு பொழுதுபோக்குக்கு மற்றும் விளையாட்டுக்கு மீன்பிடியில் ஈடுபடும் எவருக்கும் 'எலோபிடே' வகைக்கு சொந்தமான குறித்த சவுக்கு சுறா மீன்கள் பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.
மேலும் படகு உரிமையாளர்கள் அல்லது மாலுமிகள் இறந்த சவுக்கு சுறாவையோ அல்லது உடலின் பகுதியையோ படகில் வைத்திருப்பதோ, மற்ற படகுகளுக்கு பரிமாற்றுவதோ தண்டனைக்குரிய குற்றம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM